’சின்ன எஜமான்’ பாட்டு : கவிஞர் சலீம்

’தாதா’ என்று நாகூர் ஜனங்கள் பலரால் மரியாதையாக அழைக்கப்படும் சின்னஎஜமானின் ஹத்தம் இன்று. சென்றவருடம் நாகூர் அலங்காரவாசல் பந்தலில் என்னைக்கட்டித் தொங்கவிட்டாள் அஸ்மா. ரொம்பநேரம் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டும் இருந்தாள். இவளன்றோ இல்லாள்!அல்லாஹ்வின் அருளால் இந்த வருடம் இல்லை; தப்பித்துவிட்டேன். ஆனால் மகள் – இல்லை, அனீகாவை தொங்கவிடவில்லை – மகளுக்காக நேர்ந்துகொண்டு வளையல்களைத் தொங்கவிட்டிருக்கிறாளாம். நல்லது. இந்த நேரத்தில்  சின்னஎஜமான் பற்றி எங்கள் சலீம்மாமா அவர்கள் இயற்றிய பாடலைப் பதிவிடுகிறேன். மனம் கசங்கும்போதெல்லாம் நானும் ஜஃபருல்லாநானாவும் இதைக் கேட்பது வழக்கம். நானாவின் தொந்தரவு தாங்காமல் நானும் என்னால் அவரும் கேட்பதும் வழக்கம்தான். பாடியவர் ஏதோ அரப்ஷாதைக்கால் பாடகர். சிங்கை கமால் நாகை நவாப்ஜான் என்று நண்பர் அசனா சொன்னதாக நினைவு. ஒரிஜினலாக அன்று பாடிய இசைச் சக்கரவர்த்தி ஜி.ராமனாதன் அவர்களின் உருக்கத்தை இங்கே எதிர்பார்ப்பது அனாவசியம். ’வச்சிக்கிட்டா வஞ்சகம் பன்றாஹா?’ என்று ஹஜ்ரத் கேட்பது போலத்தான். இஸ்லாத்தில் இசை கூடுமா கூடாதா என்று வழக்கம்போல விவாதம் செய்யாமல் ‘In my view, music does not do any harm to adhering to the basic tenets of Islam. If it does, then you faith is weak. My faith is strong enough not to forget God and to remember God even while listening to music’ என்று ’ஆம்பூர் ஆல்ஃபா’ சொல்வதை அப்டியே கேட்டுக்கொள்ளுங்கள். நன்றி. – ஆபிதீன்

 ***

Download

நன்றி : அசனாமரைக்காயர்