நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள் மர்ஹூம் சேத்தநானாவுடன் பாடியது…
https://soundcloud.com/zainulahbudeen-hussain/sma-kader-vararo-vararo-gnanakiliye
போனஸ் :
கவிஞர் இஜட். ஜபருல்லாவின் கவிதை , நண்பர் இதயதாசன் தொகுத்த கந்தூரி சிறப்பு மலரிலிருந்து…
நாகூரின் நாயகரே…!
நாதனொளி மெய்ச்சுடரே…
நம்பிவரும் மக்களுக்கு
நலமளிக்கும் தூயவரே…
பாகூறும் புகழனைத்தும்
பத்தியத்து வாழ்க்கையினால்
நாகூறும் நன்னெறியாய்
நாட்டுக்குத் தந்தவரே..!
“ஆதிபிதா ஆதத்தின்
வழிவந்த மக்கள் எல்லாம்
சோதரர்கள்” என்ற நபி
சொல்லுக்கு நிரூபணமாய்
சாதிமத இனபேதம்
சாய்த்த உங்கள் சமத்துவத்தால்
மேதினியே உங்களிடம்
தேடி வந்து சூழ்கிறது…!