தவராஜ செம்மேருவே, ஷாஹுல் ஹமீதரசரே!

‘நல்லா ஓடுறீங்க..’ என்று சொல்லியிருப்பார்கள் போல.  டாக்டர் ஆயிஷாபீவியின் காதில் ‘நல்லா பாடுறீங்க’ என்று கேட்டு, பாடியும் விட்டார் – ‘எஜமானே நாகூரின் அரசே எந்தன் இசை உங்கள் தர்பாரின் பரிசே’ என்று. தலைதெறிக்க ஓடிவிட்டு  பிறகு நம் ஈ.எம்.ஹனீபாவை கேளுங்கள் – இளைப்பாற. யா காதிர் முராது ஹாஸில்…! (‘ஆண்டவரே , என் நாட்டங்களை நிறைவேற்றும்’) – ஆபிதீன்

***

***

குணங்குடி மஸ்தான்  :

திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!

சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!

ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!

அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!

மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி!

வசனித்து நிற்கவே கொழுவீற்றிருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ

தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!

தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே!

***

தம்பி இஸ்மாயிலின் முகநூல் பக்கத்திலிருந்து… :

இஸ்மாயில் : எனது பாட்டானார் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்மாயில் அவர்கள் கம்பனை தொடுமுன்னே கன்ஜுல் கராமத்தை தான் தொட்டார்கள், அவர்கள் எஜமானின் முழுமையான ஆற்றலை எழுத்தில் வடிக்க எண்ணினார்கள், போதுமான ரெஃபரன்ஸும் சோர்சும் அவர்களுக்கு யாரும் தர முன்வரவில்லை, கம்பனை தொட எண்ணினார்கள், காலடியில் கொண்டு வந்து கொட்டி விட்டார்கள் அத்தனை சோர்சையும் விபரமானவர்கள்.

மறுமொழி :  இன்றைக்கும் அதே நிலை தான் இஸ்மாயில். அவர்கள் அணிந்த பழைய செருப்பு பத்திரமாக அங்கே இருக்கிறது. ஆனால் அவர்கள் எழுதிய நூல்களை காணவில்லை. என்ன கொடுமை இது ? எதை பாதுகாக்க வேண்டும் என அவர்களின் வாரிசுகளுக்கு தெரியாதா ? இதன் மோசமான விளைவு என்ன தெரியுமா ? சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் அன்றைய தஞ்சை மன்னருக்கு எவராலும் நிவர்த்தி செய்ய முடியாத நோயை நாகூரில் அடங்கியிருக்கும் இவர்கள் தான் நிவர்த்தி செய்தார்கள். அன்றைய மன்னருக்கே வைத்தியம் பார்த்தவர்கள். அதனால் தான் இந்த நாகூர் பகுதிகளை மன்னர் அவர்களுக்கு பரிசாக வழங்கினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன ? மன்னருக்கே மருத்துவம் பார்த்த ஆற்றல் வாய்ந்த மருத்துவரான அவர்களின் வாரிசுகள் உடல்நிலை சரியில்லை எனில் தஞ்சையில் உள்ள மருத்துவமனைகளுக்கு படையெடுக்கிறார்கள். எதை பாதுகாப்பது என்பது தெரியாமல் போனதால் வந்த வினை இது !

இஸ்மாயில் :  Wonderful… மிகச் சரியாக அருமையாக சொல்கிறீர்கள்… ஆனால் ஒரே ஒரு வேறுபாடு… அவர்களின் பழைய செருப்பும் கூட பாதுகாக்கப்பட வேண்டியவை தான் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்… அது need to preserve… இது nice to preserve

***

அக்பர் அவையில் பாடிக் கொண்டிருக்கும் போதே பற்றி எரிகின்ற தன்மையுடைய ‘தான்சேன்” என்ற பாடகரை பற்றி படித்திருக்கிறோம் அல்லவா, தான்சேன் அவர்கள் பிறப்பால் இஸ்லாமியர் அல்லர், அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர், அவருடைய ஆன்மிக வழிகாட்டியும் நமது எஜமான் அவர்களுடைய வழிகாட்டியும் ஒருவரே, அவர்களே ஹஜ்ரத் கௌது குவாலியர். (தான்சேன் அவர்களுக்கு பய்ஜு பவ்ரா என்பவருக்கும் நடந்த போட்டிகள் சுவையான வரலாற்று சம்பவங்கள்)
***

நாகூர் நாயகம் குவாலியர் எனும் நகரில் அன்னாருடைய ஆன்மிக குருவான ஹஜ்ரத் கவுஸ் (றஹ்) அவர்களுடன் 10 ஆண்டுகள் மூஸா நபியவர்கள் ஹில்ர் அவர்களிடம் கற்க விரும்பிய கல்வியை கற்று தேர்ந்தார்கள்.

***

எஜமான் அவர்கள் பிறந்த ஆண்டு: ஹிஜ்ரி 910, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 (கிபி 1504, நவம்பர் 17) வஃபாத்தான ஆண்டு: ஹிஜ்ரி 978, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 (கிபி 1570, நவம்பர் 09) – அதிகாலை சுப்ஹுடைய நேரம் 4:30 மணியளவில் வஃபாத்தானார்கள்.

***

பொதக்குடி அஹ்மது, நாகூர் ஹனீபாவைத் தொடர்ந்து சிங்கை கமால் அளிக்கும் சிறப்பு போனஸ் :

நமனை விரட்ட மருந்தொன்று இருக்குது…. (mp3)

Download

***
நன்றி : அசனா மரைக்காயர், இஸ்மாயில்

குணங்குடி மஸ்தான் சாஹிபு

‘இஸ்லாம் வளர்த்த இசைத்தமிழ்’ பதிவுக்கு (ஐயோ, மீண்டும் இஸ்லாம்! – தாஜ்) மறுமொழியிட்ட பல நண்பர்கள் குணங்குடி மஸ்தான் பாடல்களின் ஆடியோ வடிவத்தைக் கேட்டிருந்தார்கள். சகோதரர் சுல்தான் நிர்வகிக்கும் நாஞ்சில்நாடன் தளத்தில் அதற்கான சுட்டியை இப்போதுதான் பார்த்தேன். ’குணங்குடியார் பாடல்கள் சென்னை கானா பாடல்களோடு கலந்த மரபாகியிருக்கின்றன. அந்த பாடல்களை மயிலை வேணு என்ற பாடகரிடமிருந்து சேகரித்து ஒலி நாடாவாக வெளியிட்டதன் சுட்டியை கீழே இணைத்துள்ளேன்’ என்ற தகவலோடு எழுத்தாள நண்பர் எம்.டி.முத்துக்குமாரசாமி உதவியிருக்கிறார். ஜனாப் சுல்தானுக்கும் திரு. ’எம்.டி.எம்’முக்கும், பதிவேற்றிய NFSC-க்கும் நன்றிகள்.

’கீறறு’ தளத்தில் இருந்த நா. மம்மதுவின் கட்டுரை ( ’சூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும்’ ) இப்போது எங்கே போனதென்று தெரியவில்லை. கீழேயுள்ள நாஞ்சில் நாடன் கட்டுரையை படித்துவிட்டு நிதானமாக பாடல்களைக் கேளுங்கள் – ‘சமயம்’ இருந்தால்.  உலகைக் ’காப்பாற்றும்’ ஒபாமா ஒன்னர மணி நேரம் ஒதுக்குவாராக, ஆமீன்!

குணங்குடியார் பாடற்கோவை – நாஞ்சில் நாடன்

***

***

updated 18th Aug’2011 :

சூஃபி ஞானி குனங்குடி மஸ்த்தான் -சூஃபித் தத்துவமும் இசையும் -நா. மம்மது