‘(எக்)ஸ்போஷர்’ புகைப்படங்கள் – ஜெஸிலா

Palestinian men pray underneath a toppled minaret during Friday prayers at Al-Sousi mosque that was targeted by Israeli occupation forces strikes during the aggression on Gaza in 2014.  (Source : Shehab News)

*

ஷார்ஜா புகைப்படக்காட்சி பற்றி சூப்பர் சுப்புஹாயன்பாய் உள்பட பலரும்  விரிவாக முகநூலில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.  சகோதரி ஜெஸிலா பானு எழுதியது உள்ளத்தைத் தொட்டது. பகிர்கிறேன். அங்கே சில புகைப்படங்களைப் பார்த்து வியந்து என் நிக்கான் டப்பாவில் ‘க்ளிக்’ செய்தபோது, ‘அங்கிள், லென்ஸ் மூடியிருக்கு’ என்று சொல்லி மானத்தை வாங்கினான் ஜெஸிலாவின் மதிநிறை மகன். நல்லவேளையாக அவர் இதைக் குறிப்பிடவில்லை. நன்றி. அறிவார்ந்த அவர் மகளாருக்கும் வாழ்த்துகள்.

’ஒட்டக மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பில் வெளியான ஜெஸிலாவின் சிறுகதையை பிறகு இணைக்கிறேன், இன்ஷா அல்லாஹ்!

*

ஃபேஸ்புக்கில் ஜஸீலா எழுதியது :

மனிதன் தன் அனாவசியத் தேவைகளுக்காக விலங்குகளைக் கொடூரமாகக் கொன்று குவித்த படங்களையும், மனிதன் மிருகமாகவே மாறி சகமனிதர்களைச் சாகடித்ததருணங்களையும் காட்சியாகப் பார்த்த போது இறைவன் சில இடங்களில் இல்லாமல் போய்விடுவானோ, அப்படியொருவன் இருந்தால் மனிதனாலேயே சகிக்க முடியாத துன்பமான காட்சிகளை, படைத்த இறைவன் எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பான் என்ற நிந்தனை மிகுந்த கேள்வியுடனும் “எங்கே இறைவன்?” என்ற தேடலோடும் அமைந்திருந்தது ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் நடைபெற்ற ‘(எக்)ஸ்போஷர்’ புகைப்படக் கண்காட்சி இந்த சிந்தனைகளோடு வாடியிருந்த என் முகத்தை மலரச் செய்தது (மேலே உள்ள) இந்தப் படம்.

“போரில் மசூதி சிதிலமாகி, மினரா சரிந்து கிடக்கும் வேளையிலும் கூட தொழுகையை நிறைவேற்றும் இப்படியான ஆழமான இறை நம்பிக்கைகாகவாவது இறைவன் இவர்களை நல்லபடியாக வைத்திருக்க வேண்டாமா?” என்று என்னுடன் வந்திருந்த என் மகளிடம் புலம்பினேன். அதறகு அவள், “ம்மா, நீங்க இங்குள்ள அழகான படைப்புகளைப் பாருங்கள். பார்க்க அரிய அழகான காட்சிகளைப் பாருங்கள். நீங்கள் போர் படங்களையும் மிருகங்கள் வதைக்கப்படும் படங்களையும் பார்த்து ஏன் இறைவனைக் குறை கூறுகிறீர்கள்? இதெல்லாம் மனிதனின் கொடூர சிந்தனையாலும் பேராசையாலும் நிகழ்வன. இறைவன் விசாலமான பிரபஞ்சத்தைப் படைத்து அதில் விதவிதமான மனிதர்களையும், உயிரினங்களையும் படைத்துவிட்டான். நம் தேர்வு எதை எப்படிப் பார்க்க வேண்டுமென்பது. இன்று நீங்கள் சோகமாக இருக்க வேண்டுமென்று முடிவெடுத்தவராகக் கண்ணீர் வரவழைக்கும் படங்களையே பார்க்கிறீர்கள். நல்லவையும் நிறைந்துள்ளன. அதையும் பாருங்களேன்” என்றாள்.

செவுளில் அறைந்தாற்போல் இருந்தது. அதன் பின்னரே மனம் கொஞ்சம் அமைதியானது.

*

நன்றி : ஜெஸிலா பானு (Jazeela Banu)

*

தொடர்புடையவை :

1.  நம்மூர் செந்தில் குமரன் இங்கே TAPSA விருது பெற்றார். இது பற்றி சகோதரர்  நெருடாவின் பதிவை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

2. சுப்ஹான்பாய் எடுத்த புகைப்படங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

3. ஆபிதீன் எடுத்த ஃபோட்டோவைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் (Original Photo : Cris Toala Olivares. Info : María Rosa Mendoza returned home at the foot of the Cotopaxi volcano.. to collect her belongings and sweep the accumulated ashes)

பவர்ஃபுல் இமேஜ்!

‘The image just stayed with me… So powerful!!’ என்று சகோதரி மதி கந்தசாமி ஜி+-ல் பகிர்ந்திருந்த இந்த ஃபோட்டோ (by Santu Brahma) என்னை பிரமிக்கவைத்தது. கையேந்தி நிற்பது நான்தான் என்றும் பட்டது (வஹாபிகள் மன்னிக்கவும்).

பிரபாகர்-ன் மறுமொழி இது :: … அந்தம்மாவோட உடல் மொழியைக் கொண்டு பார்த்தால் நாம் எப்படி வேண்டுமானாலும் அனுமானித்துக் கொள்ளலாம். உதாரணமாக, உனக்கு கண்ணு இருக்கா தாயீ… இப்படி என் வவுத்துல அடிச்சு என்னோட கடைசி காட்டையும் அடிச்சி புடிங்கிட்டானே உனக்கு கண்ணு இருந்தா இப்படி பார்த்துகிட்டு சும்மா இருப்பியான்னும் கேக்கலாம்…

இப்படி நடையா நடந்து என் புள்ளைகளுக்கு ஒரு வழி காமின்னு கையேந்தி நிக்கிறேனே உனக்கு கண்ணு இல்லையா… உனக்கு எல்லாமே தெரியும் பார்த்து செய்யுன்னும் கேட்டு நிக்கலாம். ரொம்ப சிக்கலில்லாத ஓர் எளிமையான அம்மாவா இருக்கு, ஒரு பத்து பேருக்குள்ளர வாழுமா இருக்கும்.

santu-brahma

Thanks to : Santu Brahma

https://m.facebook.com/santu.brahma

ஃபேஸ்புக் கண்கள்!

Photo © Hegel Jorge /from A Lifetime Photography (fb)

photo by Hegel Jorge -fb

 

கனிபாவா கச்சேரி

நாகூர் ‘ரிபாய் ஜமா கலிபா’ கனிபாவா தலைமையில் நடந்த கச்சேரி ஒன்றை நண்பர் சித்தார்த்   ப்ளஸ்-ல் பகிர்ந்திருந்தார். அதை இங்கே கேட்கலாம். வெள்ளி தவறாமல் வீட்டிற்கு வந்து பாடும் கனிபாவாவை நான் எடுத்த புகைப்படம் இது (Jun’2010), ஒரு  ஃபில்டரோடு. எப்படி இரிக்கிது?

Click here to enlarge Photo

ganibava-nagore-jun2010ft

« Older entries