எங்களின் ’எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் தெரிவித்தேன் இப்படி :
என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஹனீபாக்கா அவர்களிடமிருந்து இன்று வந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தார் : ’க.நாசுவின் மருமகன் பாரதிமணியின் கட்டுரைகளோடு (உனக்கு) பரிச்சயமா? மனிசன் தன்னுடைய டில்லி வாழ்வின் கோலங்களை ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லியிருக்கின்றார். உயிர்மையில் வெளிவந்த கட்டுரைகள் இப்பொழுது நூல் வடிவில் வந்திரு்க்கின்றது’
அந்த குசும்பு புடிச்ச மனுசனோடு பழக்கமில்லை என்று சொல்லலாம் என்று இருக்கிறேன்.
***
’பாட்டையா’ என்று நண்பர் சுகாவால் பிரியமாக அழைக்கப்படும் பாரதிமணி சாரிடமிருந்து உடன் மெயில் வந்தது :
அன்புள்ள ஆபிதீன்:
எனக்கும் அந்தாளெ சுத்தமா பிடிக்காது, பாத்துக்கோ! கெளட்டு மனுசனுக்கு தலயிலருந்து காலு வரெ நாஞ்சில் குசும்பு! சும்மாவே கெடக்கமாட்டங்கான். அந்தாளு எளுதினதிலெ இது புதிசு. படிச்சிட்டியா? தாஜுக்கு அனுப்பிக்கொடுத்தேன்.
சுட்டி இங்கே : எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. — பாரதி மணி
***
மேலுயுள்ள சுட்டியை அழுத்திப் படியுங்கள். கட்டுரைக்கு அவரே கொடுத்த கமெண்ட் எப்படி? மஹா குசும்பு புடிச்சவர், இல்லையா? அது போகட்டும், ’என்னடா இது… தாத்தாக்களுடன் நம்ம சகவாசம் ஜாஸ்தியாயிடிச்சே..’ என்று முணுமுணுத்துக்கொண்டே முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். சரிதான்….!
***
மேலும்…
அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி! – பாரதி மணி
பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி : தாஜ்
பல நேரங்களில் பல மனிதர்கள் – ஸிந்துஜாவின் விமர்சனம்
***
நன்றி : பாரதிமணி ஐயா | bharatimani90@gmail.com