வெளிச்சம் – ஆழி சூல் உலகிலிருந்து…

“அங்க மேசையில கார்டினல் நியுமேன் புக் இருக்கு, சிவப்பு கலரு. அத எடுத்திற்று வந்து அதுல ‘லீட் கைண்டிலி லைட்‘ன்னு ஒரு பொயம் இருக்கு, அத எனக்கு வாசிச்சிக் காட்டு பாப்போம்.”

கில்பர்ட், அவர் குறிப்பிட்ட கவிதையை வாசிக்க ஆரம்பித்தான்.

“Lead, Kindly Light, amidst th’encircling gloom,
Lead Thou me on!
The night is dark, and I am far from home,
Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to see
The distant scene; one step enough for me.”

“கவிதையின் பொருள் புரிஞ்சிச்சா ஒனக்கு? மோட்சத்த இப்பவே பாக்கணுமின்னு அவசியம் இல்ல. அடுத்து எடுத்து வைக்கிற ஒரு அடிக்கி வெளிச்சம் தெரிஞ்ச போதும்ங்குறாரு. வாழ்ற இந்த நிமிஷம் ஒழுங்கா வாழனும், அதுக்கு வழிகாட்டுனா போதும்ங்குறாரு. நீ என்னென்னா நற்கருண, ஆசீர்வாதம், மோட்சம்ங்குறா..!” – காகு சாமியார்.

***

நன்றி :  ஜோ டி குரூஸ் , தமிழினி