Valley Recalls…

Shivkumar Sharma and Hariprasad Chaurasia
Thanks to : Manu Tejomurtula


ஃபேஸ்புக்கில் இன்று பகிர்ந்தது..

ஜாக்கிரதையாகப் பேச ஜாஃபர்நாநாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்குப் பிடித்த இசைக் கலைஞர் ஷிவ்குமார் ஷர்மா இறந்த செய்தியை நேற்று பகிர்ந்தவரிடம், ‘ எதற்கும் ’செக்’ செய்துகொள்ளுங்கள் நாநா.. அவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்த நினைப்பாக இருக்கிறது’ என்றேன். என் ஞாபகமறதி பற்றி நன்கு தெரிந்தவர் நாநா. நேற்றைய செய்தி உண்மைதான் ஆபிதீன் என்றார் கவலையோடு. பெரும் வருத்தம்.

என் குழப்பங்கள் அப்படி.

ஊரிலிருக்கும் சமயத்தில், ஸலாம் சொல்லும் சில மனிதர்களைப் பார்த்தால், ’இவங்க ’மவுத்’தாயி நாளாவுதே.. பதில் சலாம் சொல்லலாமா வாணாமா..’ என்று பயத்தோடு தடுமாறுவேன்.. அந்தச் சமயம் அவர்கள் கையை வேறு நீட்டித் தொலைவார்கள். இதுவரை ஒன்றும் ஆகவில்லையென்று வைத்துக்கொள்ளுங்கள்.

உண்மையில் அவர்கள் அல்லவா பயப்பட வேண்டும் என்றாள் அஸ்மா.
ஏன் புள்ளே?
நீங்கதானே பார்க்க ’மய்யத்து’ (பொணம்) மாதிரி இக்கிறீங்க!

சரி, இருந்துவிட்டுப் போகிறேன். ஆளுமை என்றால் அப்படித்தான். இப்போதைய கவலை என்னவென்றால் .. உயிரோடு எதிரில் வருகிறவர்களைப் பார்த்து, நீங்க இன்னும் மவுத்தாகவில்லையா என்று கேட்க முடியுமா, என்ன நினைத்துக் கொள்வார்கள்?

இந்த சந்தேகத்தைத் தான் கேட்டேன்.

ஜாஃபர்நானா அமைதியாக சொன்னார் : அப்படிலாம் கேக்கக்கூடாது ஆபிதீன்.

அப்புறம்?

‘அங்கே’ எல்லாம் நல்லா இக்கிறாஹலான்னு பொதுவா கேக்கனும்!

பின்னூட்டமொன்றை இடுக