எதிர்கொள்ளுதல் (கவிதை) – சமயவேல்


சமயவேலின் ‘எதிர்கொள்ளுதல்’ கவிதையை பெருமாள் முருகன் விளக்குவதை வாசித்துவிட்டு , ‘எப்படிலாம் நுணுக்கமாக ரசிக்கிறாஹா, வெவரிக்கிறாஹா.. எனக்கு ஏன் அப்படி வரமாட்டேங்குது புள்ளே?’ என்று அஸ்மாவிடம் கேட்டேன். ‘அஹ தலையில மூளை இக்கிது.. ஆனா ஒங்க தலையில…’ என்று சொல்லி முடிக்காமல் ஒரு கல்லை எறிந்தாள். புரிந்துவிட்டது. தொப்பி! – (MeWe -2019)

*

samayavel-18a

எதிர்கொள்ளுதல் – சமயவேல்

ஒரு கல்

என் முதுகில் விழுந்தது

வலியோடு நிமிர்ந்து

மரத்தைப் பார்த்தேன்

காற்றில் கிளைகள்

ஆடிச் சிரித்தன

எவரோ எப்போதோ எறிந்து

சிக்கிப் போன கல்லுக்கு

விடுதலை

குனிந்து கல்லை எடுத்தேன்

என் வலி, விசாரம்,

வழியற்ற கோபம் எல்லாம்

கல்லின் முழுமுற்றான மௌனத்தில்

கரைந்து போயின

ஒரு குழந்தையெனக்

கல் கைவிட்டு இறங்கிக்கொள்ள

நான் மீண்டும்

பழம் பொறுக்கத் தொடங்கினேன்.

***

நன்றி : சமயவேல்

தொடர்புடைய பதிவு :

கை விட்டு இறங்கும் கல் – பெருமாள்முருகன்

பின்னூட்டமொன்றை இடுக