இது ‘தண்ணி’ அடிப்பவர்களுக்கு அல்ல!

தாஜ்-ன் முன்குறிப்பு:

ஆபிதீன் பக்கங்களில் நான் பயனுள்ள கட்டுரைகளை – அதாவது , ஆபிதீன் பக்கங்களைப் படிக்கும் எல்லோருக்குமான பயன்தரும் கட்டுரைகளை – எழுதுவதில்லையென்று எனக்கே என் மீது வருத்தம் உண்டு. இந்த மன உளைச்சலுக்கு ஏதாவது ஓர் தீர்வு செய்யணும் என்கிற உயர்ந்த நோக்கில், ஒரு வாரப் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்த இக்கட்டுரையை தட்டச்சு  செய்தாவது அனுப்பணும் என்கிற முடிவில் இயங்குகிறேன். இந்த மாபெரும் சேவைக்காக என்னை நீங்கள் கட்டாயம் பாராட்டுவீர்கள். என்ன , பாராட்டுவீர்கள்தானே?

‘வாட்டர் தெரஃபி’ பற்றியும் அதன் பயன் பற்றியும் நான் பத்து வருடங்களுக்கு முன்னால் அறிய வந்தேன். வாட்டர் தெரஃபி ஓர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய மருத்துவர்கள் உலகுக்கு அறிமுகப் படுத்திய ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ ஞாயிறு மலரில், ஆசிரியர் வீரமணி அவர்கள் இது குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில், தனது உடல் சுகவீனங்கள் குறித்து மா.நெடுமாரனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் தனக்கு இந்த வாட்டர் தெரஃபியை பற்றி கூறி, அறிமுகம் செய்து வைத்தார்கள் என்றும், அது முதல் அதனை கடைப்பிடிக்க தான் நிறைய பலன் அடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் வியந்து போனேன். எத்தனை எளிய வைத்தியமாக இருக்கிறது இது என்று! உடனே சபதம் பிறந்தது. நாளை முதல் நாம் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாக. ஆனால் பாருங்கள் அந்த நாளைதான் இன்னும் வரவில்லை. பத்து வருடமாகிவிட்டது. அது இன்னும் வராததுதான் புரிந்து கொள்ள முடியவில்லை!

என்றாலும், அவ்வப்போது வாட்டர் தெரஃபி குறித்து யோசிப்பதுண்டு. சில சமயம் சின்னச் சின்னதான சில சங்கதிகளை செய்வதுண்டு. ‘நீர் நிறைய குடி’ என்று வாட்டர் தெரஃபிகாரர்கள் சொல்கிறார்கள்! நான், என் காலம்தொட்டு அதனைத்தானே செய்தும் வருகிறேன். இவர்களுக்காக இன்னொரு டம்ளர் சேர்த்து பருகுவது பெரிய காரியமுமில்லை! இப்படி சில கடைப்பிடிப்பவனாக இருந்தாலும், இந்த மஹா எளிய வைத்தியத்தினாலான பெரும் பயனை நான் ஒப்புக் கொள்ளவே செய்கிறேன்.

‘கற்றதினாலான பயன் என்பது, அதனை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதுதான்’ என்று என்பாட்டி எனக்கு அறிவுரை சொல்லும். அதனைத்தான் இன்றுவரை செய்து கொண்டிருக்கிறேன், இக் கட்டுரையையும் சேர்த்து.

*

தண்ணீர் மருத்துவம்

இரா. மணிகண்டன்

எப்போதெல்லாம் உங்களுக்குத் தண்ணீர் குடிக்கத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தண்ணீர் அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம். அதற்குத்தான் தண்ணீர். இந்த நேரம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்; இந்த நேரங்களில் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதெல்லாம் இல்லை.

நம் உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான் உள்ளது. உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கடத்தும் வேலையை தண்ணீர்தான் செய்கிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப தண்ணீர்தான் உதவுகிறது. நம் உடலின் வெப்பத்தை சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சமநிலையில் வைத்திருப்பதும் இந்தத் தண்ணீர்தான். தண்ணீர் இல்லாவிட்டால் நம் உடலில் உள்ள மூட்டுகளின் வழவழப்புத் தன்மைபோய் மூட்டுக்கள் தேயத் தொடங்கி விடும்.

சுருக்கமாக தலை முதல் பாதம் வரை உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தண்ணீர் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக நம் மூளை செயல்பட 90 சதவீதம் தண்ணீர்தான் தேவையாக உள்ளது. எப்போதெல்லாம் நம் உடலில் நீர்ச்சத்து குறைகிறதோ அப்போதெல்லாம் மூளையின் செயல்பாடும் குறையும். நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். அதன் முதல் அறிகுறி தலைவலியாகத்தான் இருக்கும். உடற்சோர்வு, மயக்கம் எல்லாம் அடுத்தடுத்து வரும்.

சமீபத்தில் ஜப்பான் மருத்துவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள நீர்தெராஃபி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது ஏறத்தாழ நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த தண்ணீர் மருத்துவம்தான்.

காலையில் எழுந்ததும் வாயை மட்டும் கொப்பளித்து விட்டு, ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். போகப்போக சரியாகிவிடும். அதன் பின் ஒரு மணிநேரத்திற்கு எதையும் சாப்பிடக் கூடாது. காபி, டீ, உணவு, நீராகாரம் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது. ஒரு மணி நேரத்திற்குப்பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 30 நாட்களுக்குள் பி.பி.கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். அதைப்போல வாய்வுக் கோளாறு மலச்சிக்கல், நீரழிவு நோய்களும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தண்ணீர் தெராஃபியில் பின்வரும் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

1. முகம் பொலிவு பெறும்.

2. கொழுப்புகள் நீங்கும். அதனால் உடலின் எடை குறையும்.

3. ஜீரண சக்தி அதிகரிக்கும்.

4. நாள் முழுவதும் உடல் புத்துணர்வுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

5. ரத்த அழுத்த நோய் நீங்கும் அல்லது கட்டுப்படும்.

6. சக்கரை வியாதி கட்டுப்பாட்டிற்குள் வரும்.

* சரி, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியெல்லாம் கட்டாயமில்லை.

ஒவ்வொருவருடைய உடல்வாகு, வாழும் இடம், சீதோஷ்ணநிலை, செய்யும் வேலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறுபடலாம்.

நம் உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி தேவையான அளவு தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும்.

* சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா கூடாதா?

நாம் உணவு உண்ணத் தொடங்கியதுமே நம் வயிற்றில் உணவை ஜீரனிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்க ஆரம்பித்து விடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் சேர்த்து உட்கொண்டால், அந்தத் தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து, ஜீரணப் பணியை பாதித்து விடும்.

அதனால் சாப்பாட்டின் போது இடையியையே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கலாம்.

* விக்கல் எடுக்கும்போது கூட தண்ணீர் அருந்தக் கூடாதா?

அதிக காரம், அதிக உப்பு, விக்கல், உணவுப் பொருள் தொண்டையில் சிக்கிக் கொள்ளுதல் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக தண்ணீர் அருந்தித்தான் ஆகவேண்டும். அதில் தவறில்லை. ஒவ்வொரு கவளத்திற்கு இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்தானது.

* அப்படியானால் எப்போதுதான் தண்ணீர் அருந்துவது?

உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன், சாப்பிட்ட பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, வேண்டிய மட்டும் தண்ணீர் அருந்தலாம்…. தண்ணீர் தாகம் எடுத்தால்.

சாப்பிட்டு முடித்ததும் வயிறு முட்ட சிலர் தண்ணீர் குடிப்பார்கள். அது தவறு. சிறிதளவு தண்ணீர் போதும். ஜீரண சக்தி அப்போதுதான் தடைபடாமல் இருக்கும்.

அதிக உப்பு, அதிக காரம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வேகமாக சாப்பிடுவதைத் தவிர்த்தாலே விக்கல் வராது. நிதானமாக மென்று விழுங்கினால் போதும் தண்ணீர் தேவைப்படாது. உமிழ்நீரும், வயிற்றில் சுரக்கும் ஜீரண திரவமும் மட்டுமே போதும், ஜீரண சக்தி தடைபடாமல் இயங்க.

இவையெல்லாம் தண்ணீர் குடிப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள். ‘தண்ணி’ அடிப்பவர்களுக்கு அல்ல.

***

நன்றி: குமுதம் (3.4.2013) , தாஜ்

கிளினிக்கில் ஒருத்தன் அழுதுக்கிட்டு இருந்தான்…

கிளினிக்கில் ஒருத்தன் அழுதுக்கிட்டு இருந்தான்.ஏன் அழுவுறே?-கூட இருந்தவர் கேட்டார்.பிளட் டெஸ்ட் எடுக்க வந்தேன்;விரல வெட்டிபுட்டாங்க..!இப்ப கேட்டவன் ஒப்பாரியே வக்க துவங்கிட்டான்..நான் மூத்திர டெஸ்ட்க்கு வந்திருக்கினே..!

மேலும் பார்க்க :  மாற்றுவழிதான் என்ன? (தினமணி தலையங்கம்)

***

நன்றி :  பி.ஸ்தனிஸ்லாஸ் , தினமணி

நண்டுப்பேன் – மஜீதின் ‘மருத்துவ’க் கட்டுரை

அன்புள்ள தாஜ், பேசாமல் ஆபிதீன் பக்கங்களை ’ஆபிதீன் பலபட்டறை’ என்று மாற்றிவிடலாமா? – ஆபிதீன்

***

நண்டுப்பேன்

மஜீத்

நண்பர் M. அப்துல்காதர் எப்பப் பாத்தாலும் எனக்கு “ஹாரிபிள்” வேணும், அதுவும் இப்பவே வேணும்னு ஆபிதீன்ட்ட ஒரே அடம். ஆனா நான் இதுக்கெல்லாம் மசியலை. அதுக்குக் காரணமும் அவுருதான். பின்னே என்னங்க? ஹமீது ஜாஃபர் நானாவோட மருத்துவக் கட்டுரைக்கு அவர் எழுதுன பாராட்டு என்னய பொரட்டிப் போட்ருச்சு. //மீண்டும் ஒரு மருத்துவ கட்டுரை நானாவிடமிருந்து….., அல்ஹம்துலில்லாஹ், பிரமிப்பாய் இருக்கிறது. நிறைய எழுத அல்லாஹ் நானாவுக்கு நீடித்த ஆயுளை தருவானாக!! ஆமீன்.//

ஜாஃபர் நானா திறமைக்கு அது சாதாரணம்தான். என் திறமைக்கு அதெல்லாம் நெனச்சுக்கூட பாக்கமுடியாது. இருந்தாலும் பாருங்க, இது மாதிரி நம்மளும் ஒரு பாராட்டு வாங்குனா எப்பிடி இருக்கும்னும் ஒரு கற்பனை, நம்மள சாய்ச்சுருச்சு.

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைம்பாங்கள்ல? அந்த மாதிரி, பொன்ன வக்கிற இடத்துல ’பு’வை வச்சுப்பாப்போமேன்னு துணிஞ்சிட்டேன்.
நம்ம தகுதிக்கு ஒரு மருத்துவக் கட்டுரை எழுதியே ஆகனும்னு ஒரே அரிப்பு.

அடடே, அரிப்பைப் பத்தியே எழுதுனா என்ன? சரி…. எழுதிடலாம்.

பாருங்க சார்.. இந்த அரிப்பு இருக்குதே…..(அடச்சே! என்ன இது? வாரச்சந்தையில லேகியம் விக்கிறவன் மாதிரி… ஆரம்பமே சரியில்லயே? மாத்திரலாம்)

சில நேரங்கள்ல சிலபேருக்கு இடம் பொருள் ஏவல் இல்லாம அரிப்பெடுக்கும். அவுங்க சொரிய முடியாம தவிக்கிறதப் பாத்தா பாவமா இருக்கும். இதுக்கெல்லாம் காரணம் சிலசமயம் ஒருவிதப் ‘பேன்’கூட காரணமா இருக்கலாம். அதுக்குப் பேரு ‘நண்டுப்பேன்’. ஏன்னா பாக்குறதுக்கு நண்டுமாதிரி இருக்கும்- படத்தைப் பாருங்க…… (ரொம்பச் சின்னதா இருக்கும். மைக்ராஸ்கோப்புலதான் நல்லா தெரியும்)


  
Pthirus pubis

(அது இருக்கிற இடத்தை வச்சு, நீங்களா ஒருபேரை வச்சுக்கக்கூடாது, சொல்லிபுட்டேன்)

‘பேன்’னு சொன்னாலே மயிர் இருக்கிற இடத்துலதான் அட்டாக் பண்ணும். தலைப்பேன் தலைல இருக்கிற மயிர்ல அட்டாக் பண்றமாதிரி, இது அட்டாக் பண்ற இடம்: ஆம்பள பொம்பளகளோட மயிர் இருக்குற ’மத்த’ இடங்கள். முதல்ல அரிப்புதான் வரும். அதோட எச்சம் நமக்கு ஒத்துக்காம வர்ற அலர்ஜிதான் காரணம். அப்புறம் ‘ஈர்’ நிறையா உருவாகி நம்மள படுத்திரும். (ஆமா, ஈரைப் பேனாக்கி, பேனைப்………………………..)

இதுக்கு permethrin 1% cream rinse and pyrethrins  இந்தமாதிரி மருந்தெல்லாம் இருக்கு. ஸ்பெஷல் ஷாம்புகூட இருக்கு- Lindane shampoo (1%). ஆனா எதுவா இருந்தாலும் நீங்களா வைத்தியம் பாத்துக்கக் கூடாது. இது இருக்கிறமாதிரி சந்தேகம் வந்துச்சுன்னா (இனிமே வராம இருந்துரும்???) நீங்க ஒடனே ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுக்கிட்டப் போய்த்தான் ‘காமிக்கணும்’

தலைப்பேன் மாதிரியே இதுவும் கூடப் “படுக்கிறவங்களு” க்கெல்லாம் பரவிரும். இதுக்கு ரொம்பப் புடிச்ச இடம் “அது”தான்னாலும், மயிர் இருக்கிற எல்லா இடங்கள்லயும் இது உக்காந்துக்கிரும். ஆம்பளைகளோட “கம்புக்கூடு”, மயிரு இருக்கிற வயிறு இதெல்லாம்கூட இதுக்கு வசதியான எடந்தான். ஈரு வைக்கிறதுக்கு, இந்த மாதிரி:


 
Pubic lice in genital area

 
 
Pubic lice on abdomen

அதெல்லாம்விடப் பெரிய பிரச்சினைன்னு நான் நெனக்கிறது… கண் இமை, மீசை, தாடிலயெல்லாங்கூடப் பரவிருமாம். நான் கொஞ்சம் எமோஷனல் டைப்புல்ல? அதான் நம்ம நண்பர்கள்ல யார் யாருக்கு மீசை-தாடில்லாம் இருக்கு? அவுகள்ள யார்யார் ரொம்ப “வேகமான” ஆளுகன்னு ஒரே யோசனையும் கவலையுமா இருக்கு….

இப்டித்தான் நான்  ஷூ பிரஷ் ன்னு ஒரு சிரிப்புக்கதை (அதுவும் மயிர் சம்பந்தப்பட்டதுதான் 🙂 🙂 ) எழுதப்போக ஒரு வாசகர் ‘மொஹத்தை’ வச்சுக்கிருவேன்னு சொல்லி உணர்ச்சிவசப்பட்டுட்டார். அதெல்லாம் நினச்சு எனக்கு ஒரே கவலை 😦 😦 .
 
ஒரு எச்சரிக்கை: இதைப் படிச்சதுக்கு அப்புறமா யாரும் யாரையும் தேவையில்லாம சந்தேகப்படக்கூடாது ஆமா. யாரவது தாடிக்குள்ள விரலைவிட்டு சொறிஞ்சா உடனே “அதுவா” இருக்குமோ? இவரு அப்புடி இருந்திருப்பாரோ?ன்னு யோசனையெல்லாம் பண்ணக்கூடாது. சொல்லிப்புட்டேன் ஆமா…… எதுக்குச் சொல்றேன்னா, 2% அல்லது 2.5% ஆளுங்களுக்குதான் இது இருக்காம். எல்லாரையும் சந்தேகப்படக்கூடாதுல்ல?

ஆஹா, முக்கியமான விசயத்தை மறந்துட்டேன் பாருங்க…… மருத்துவக்கட்டுரைன்னா, ரெஃபரன்ஸ் லிஸ்ட் குடுக்கணும்ல? அதாங்க ”அடி”க்குறிப்பு…அடியில் கண்ட எல்லாமே நான் சொன்னது இல்லங்க.. விக்கிலீக்ஸ்ல, அடச்சே, விக்கிப்பீடியாவுல இருக்குங்க…

Notes:

  1. ^ Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. ISBN 1-4160-2999-0.
  2. ^ Weiss RA (10 February 2009). “Apes, lice and prehistory”. J Biol 8 (2): 20. doi:10.1186/jbiol114. PMC 2687769. PMID 19232074. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pmcentrez&artid=2687769.
  3. ^ Manjunatha NP, Jayamanne GR, Desai SP, Moss TR, Lalik J, Woodland A (June 2006). “Pediculosis pubis: presentation to ophthalmologist as pthriasis palpebrarum associated with corneal epithelial keratitis”. Int J STD AIDS 17 (6): 424–6. doi:10.1258/095646206777323445. PMID 16734970. http://ijsa.rsmjournals.com/cgi/pmidlookup?view=long&pmid=16734970.
  4. ^ Klaus S, Shvil Y, Mumcuoglu KY (March 1994). “Generalized infestation of a 3½-year-old girl with the pubic louse”. Pediatr Dermatol 11 (1): 26–8. doi:10.1111/j.1525-1470.1994.tb00068.x. PMID 8170844.
  5. ^ Varela JA, Otero L, Espinosa E, Sánchez C, Junquera ML, Vázquez F (April 2003). “Phthirus pubis in a sexually transmitted diseases unit: a study of 14 years”. Sex Transm Dis 30 (4): 292–6. doi:10.1097/00007435-200304000-00004. PMID 12671547. http://meta.wkhealth.com/pt/pt-core/template-journal/lwwgateway/media/landingpage.htm?issn=0148-5717&volume=30&issue=4&spage=292.
  6. ^ Commission for Environmental Cooperation. North American Regional Action Plan (NARAP) on lindane and other hexachlorocyclohexane (HCH) isomers. November 30, 2006. North American Commission for Environmental Cooperation
  7. ^ a b Lindane shampoo, USP, 1% prescribing information. Updated March 28, 2003.
  8. ^ (FDA). Lindane Post Marketing Safety Review (PDF). Posted 2003.
  9. ^ Workowski KA, Berman SM (August 2006). Ectoparasitic infections. “Sexually transmitted diseases treatment guidelines, 2006”. MMWR Recomm Rep 55 (RR–11): 79–80. PMID 16888612. http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/rr5511a1.htm.

10. ^ Anderson AL, Chaney E (February 2009). “Pubic lice (Pthirus pubis): history, biology and treatment vs. knowledge and beliefs of US college students”. Int J Environ Res Public Health 6 (2): 592–600. doi:10.3390/ijerph6020592. PMC 2672365. PMID 19440402. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pmcentrez&artid=2672365.

***

நன்றி : மஜீத் | அரிப்புக்கு :   amjeed6167@yahoo.com

மக்கள் டி.வியில் மருத்துவர் தெய்வநாயகம்

இந்தியப் பேரீச்சையின்  (அட, நம்ம புளிதான்! ) சிறப்பு குறித்து சித்தமருத்துவப் புலி  தெய்வநாயகம் ஐயா (செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனை, எழும்பூர்) முன்பு பேசியதைப் பதிவிடுகிறேன் – ’மக்கள் தொ.கா.’வுக்கு நன்றிகளுடன். என் திறமையின் காரணமாக ஆடியோ ’ர்ர்ர்’ரென்று தொடர்ந்து உறுமும். மன்னிக்கவும், புலியென்றால் அப்படித்தான்!

மேலும் பார்க்க : தெய்வமய்யா இந்த தெய்வநாயகம்!

« Older entries