நதீமை என்ன செய்யலாம் நாகூர் ரூமி?

நாகூர் ரூமி  என்னைப் பார்க்க வந்திருக்கிறார் – நதீம் சின்னபிள்ளையாக இருந்தபோது. அறையில் நானும் மகனும் இருந்திருக்கிறோம். ரூமியோடு தனியாக, சுதந்திரமாகப் பேச விரும்பினேனாம். எனவே நதீம் அறையைவிட்டு வீட்டுக்குள் போகவேண்டும். அதற்கு நான் என்ன செய்தேன்? ரூமி சொல்கிறார் :

“வாப்பா (குழந்தைகளைக் கொஞ்சும்போது மகன் வாப்பாவாகிவிடுவார். மகள் ம்மாவாகிவிடுவாள். இதெல்லாம் எழுதப்படாத கொஞ்சல் இலக்கணம்). நீ இந்த ரூம்லயே இரிக்கணும் என்னா?” என்று சொன்னார். உடனே பையன், “இல்ல, நா வெளியே போவேன்” என்றான். அவர், “ம்ஹும், நீ இங்கதான் இருக்கணும்” என்று மறுபடியும் சொன்னார். “முடியாது, நா வெளியே போவேன்” என்று சொன்ன மகன் வெளியிலும் போய்விட்டான். ”அப்பாடா, போயிட்டான். போ என்று சொன்னால் இருப்பேன் என்று சொல்வான். எது சொன்னாலும் அதற்கு நேர் எதிராகத்தான் செய்வான்” என்று சொல்லிவிட்டு கதைவைச் சாத்தினார்!

அவர் எழுதியிருப்பது உண்மை. ஹக் அல்லாஹ் நூர் அல்லாஹ்!

இன்றுவரை அப்படித்தான் சொல்கிறேன் நாகூர் அழகனிடம். ஒரு விசயத்தில்  மட்டும் பலிக்கவில்லை. ’காலேஜுக்கு போவாதே வாப்பா’ என்றேன். ‘சரி வாப்பா’ என்று  போகாமலே இருக்கிறான்! இன்னொரு வேடிக்கை, அற வழியில் போராடும் மாணவர்களை குண்டர்கள் அடிப்பதை சென்ஷிசார் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய, அதை ‘லைக்’ செய்திருக்கிறார் சாதிக்சார். சே, எங்கு பார்த்தாலும் ஊடக வன்முறை.. ‘கையில நதீம் கோக் வச்சிக்கிறது எதுக்கு? உங்கள குறி பாத்து அடிக்கத்தான்!’ என்று இந்த அஸ்மா வேறு! என்ன செய்யலாம் ரூமி சார்?

Click here to enlarge Photo

***

nademm2012b

(싸이 – 아버지) – செல்ல மகன் நதீமுக்கு…

இதுக்குலாம் மொழி தேவையா?  நாளை (20.02.2013) பிறந்தநாள் கொண்டாடும் நதீமுக்கு வாழ்த்துகள்…

***

***

Thanks to : sc0oter

நவம்பர் இருபத்தெட்டு சந்தோஷம்

செல்லமகளுக்கு  பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசிகளும்.. எனக்குப் பிடித்த பழைய மினோல்டா கேமராவில் (SR-T101) நான் எடுத்த ஃபோட்டோ இது. (Click here  to enlarge Photo). பார்த்துவிட்டு, ’அப்படியே நீம்பர்தாங்கனி..’ என்றார்கள்  வாப்பா. சவுதியிலிருந்து ‘OneWay’-ல் ஊர் போயிருந்த சமயத்தில் கிடைத்த அவமானங்களை மறக்க மகளின் இந்த முகம்தான் உதவிற்று. சரி, கஷ்டங்களை மறப்போம். என்னைப்போலில்லாமல் நகைச்சுவையாகப் பேசுகிறார்கள் பிள்ளைகள் இருவருமே. சொந்தக்காரர்கள் தோழிகள் எல்லாருக்கும் இம்முறை குவாலிடிஸ்ட்ரீட் சாக்லெட் டின் கொடுக்கப்போவதாக நேற்று சொன்ன மகளிடம் , ‘ரொம்ப செலவாகுமே கண்ணு…’ என்றேன்.  ‘வெறும் டின்தான் வாப்பா. உள்ளே சாக்லெட்லாம் கிடையாது’ என்றது M.Sc.,(Maths). ’துஆ’ செய்யுங்கள் அண்ணன்மார் தம்பிமார்களே! – ஆபிதீன்

அழைப்புக்கு அப்புறம்…

‘பன்’முக எழுத்தாளர் ஆபிதீன் டிசைன் செய்த அவருடைய கல்யாண அழைப்பிதழ் பார்த்திருப்பீர்கள். கார்ட்போர்ட் அட்டை வாங்கக்கூட காசுகொடுக்காத மற்ற நண்பர்கள் சிலருக்காகவும் அவர் போர்ட்ரைட்கள் வரைந்திருக்கிறார்; சில டிசைன்களும் செய்திருக்கிறார். இந்தப்பதிவில் இருப்பது ஆபிதீனின் பிரியத்திற்குரிய பெரியம்மாவின் பிள்ளைகளுக்காக அவர் டிசைன் செய்த கல்யாண அழைப்பிதழ். சவுதியில் அவர் பார்த்த ஏதோ ஒரு சிறிய விளம்பரம்தான் இன்ஸ்பிரேசன் (காப்பின்னு சொல்லக்கூடாது!). டிசைன் மிகவும் பிடித்துப்போய் பின்னணி வண்ணத்தை மாற்றி (விபரங்களையும் மாற்றித்தான்) வேறு சிலரின் கல்யாணங்களும் குடும்பத்தில் நடந்தன. தமாஷ் என்னவென்றால்…. அழைப்பிதழின் அடியில் அவசியம் பார்க்கவும்!

எதற்குமே ஆபிதீனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதான் குடும்பம்…! இதான் குடும்பம்…!

« Older entries