டேப் காதர் – காரைக்குடி மஜீத்

சஹர்பாவா பற்றிய சம்பவத்தை அவர் வர்ற அதே நேரத்துல அடிச்சி வெளியேத்துன மஜீது பாய் 2020க்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பொறவு இங்கே தட்டியிருக்கார். இன்னும் தட்டனும். –  AB.

*

டேப் காதர் – மஜீத்

சின்னப்புள்ளையா இருக்கும்போது – என்ன ஒரு மூனுநாலு வயசிருக்கும் – நோம்புநாளைல வீட்ல விடியக்காலைல சஹரு வைக்கிறதுக்கு எந்திரிப்பாய்ங்களா, எங்கிட்ருந்துதான் முழிப்பு வருமோ எந்திரிச்சிருவேன்…. சஹரு வைக்கத்தான்…
அதேமாதிரி சாயந்தரம் எங்கேர்ந்தாலும் நோம்புதிறக்குறதுக்கும் தவறமாட்டேன்…

பெரும்பாலும் படுக்கப்போகும்போது நாம போடுற கண்டிசனோட எஃபக்டா, காலைல எழுப்பிவிட்ருவாய்ங்கெ.. ஃபுல்கட்டு கட்டிட்டு – முக்கியமா அந்த தயிரு வாழைப்பழம் – தூங்கிறவேண்டியதுதான். சமயத்துல வெருகுமாதிரி கரெக்ட் டயத்துக்கு, சாப்பாடு வச்சவொடனே எந்திரிக்கிறதும் உண்டு.

அப்டி ஒருதடவை தன்னால எந்திரிச்ச அன்னிக்கு, திடீர்னு ஒரு சந்தேகம்… இவய்ங்கெல்லாம் எப்டி முன்னாலயே எந்திரிச்சு சமைச்சி ரெடியாகுறாய்ங்கென்னு… அலாரம்லாம் அப்ப ஃபேஷன் இல்லை.. அவய்ங்கெட்டயே கேட்ருவோம்னு கேட்டா, சஹர்பக்கிரிசா வந்து எழுப்பிவிட்ருவாருன்னு சொல்லவும்.. அவரு வந்து எப்டி எழுப்புவாருன்னு இன்னொரு சந்தேகம் வந்தாலும் கேக்கலை… நாமளே பாத்துருவோம்னு முடிவு பண்ணியாச்சு.. அடுத்தநாள் உசாராவே தூங்கிக்கிட்ருந்தேன்.. சஹருப்பக்ரிசா டேப்படிக்கிற சத்தம் வீட்டுவாசல்ல கேக்கவும் ஒரே ஒட்டமா ஓடி கதவைத்திறந்து என்ன சொல்றாருன்னு பாக்குறதுக்கு நின்னா அவருபாட்டுக்கு பாடிக்கிட்டே போய்ட்டாரு.. உள்ளே வந்தா, எல்லாரும் எந்திரிச்சுட்டாய்ங்கெ.. வெருகு தன்னால எந்திரிச்சிருச்சு பாருன்னு சொல்லிக்கிட்டே, எதுக்குடா வாசக்கதவைத் தொறந்தேன்னு கேட்டாய்ங்கெ… சஹர்ப்பக்ரிசா வந்து எழுப்புவாருன்னு சொன்னிய.. அவருபாட்டுக்கு டேப்படிச்சுக்கிட்டே போய்ட்டாருன்னு கொறைப்பட்டுக்கிட்டேன்.. அவரு வர்ற சத்தங்கேட்டு நாமதான் எந்திரிக்கனும்கவும் புஸ்ஸுன்னு ஆயிருச்சு..

பல பக்ரிசாக்கள் வந்தாலும் அப்போ வந்த அந்த வயசான சஹர்பக்ரிசா மேல சின்னப்புள்ளைகளுக்கு ஒரு பிரியம்தான்.. வெளையாடுற வெளையாட்ட விட்டுட்டு வீட்டுக்குள்ள ஓடி அரிசியோ காசோ வாங்கிக் கொடுத்துட்டுத்தான் மறுவேலை… பெரியபெரிய பாசிமணி மாலைலாம் கலர்கலரா போட்டுருப்பாரு.. அதீத சாந்தமா ஒரு முகம்.. கொஞ்சநாளைக்கப்பறம்  அவரைக்காணலை… சஹருக்கு இன்னோரு சாந்தமுக வயசான பக்கிரிசா வந்தாரு… கருப்புநெறம்…அவரைவிட இவரு நல்ல உயரம், குரலும் கணீர் ரகம். பிற்பாடு அவரை நான் பாட்டிவீட்டுக்குப் போகும்போது சிவகங்கைல பாத்தேன்.. நன்னி வீட்டுக்கு பக்கத்துலயே. எங்க நன்னிட்ட விசாரணையைப் போட்டா, அவரு இந்த ஊருதாண்டா, அந்தா பள்ளியாசலுக்கு எதுத்தாமாதிரி ஒரு ’கோரி’ (சமாதி) இருக்குல்ல? அதுக்குப்பக்கத்துல ஒரு கட்டடம் இருக்குபாரு, அங்கதான் இருக்காருன்னு சொல்லவும், நூறு தொணைக்கேள்வி கேட்ருப்பேன்…(இவரு எப்டி அங்கெ எங்க ஊர்ல?)

இப்பதான் மேட்டர்… அவரு குடும்பத்துல மொத்தம் அஞ்சுபேரு.. அவரு அவரோடமகன் காதர், காதரோட அம்மா, அப்பறம் காதரோட சின்னம்மாமாரு ரெண்டுபேரு… காதருக்கு அப்ப பதினஞ்சு வயசிருக்கும்… மாநெறம்.. கண்ண்ண்ணீர்னு ஒரு குரல்.. நல்ல ஒயரம்… டேப் அடிச்சிக்கிட்டுப் பாடுனா எல்லாருக்கும் புடிக்கும்… பகல்ல பாடுற சூஃபிப் பாட்டுகளுக்கும், பாடாதபோது ரெண்டு சின்னம்மாக்கள்ட்ட வம்பிழுத்து வலுச்சண்டை போடும்போது பேசுற லாங்குவேஜுக்கும் இடைவெளி ஏழுகாத தூரத்துக்கும் மேல… யாரும் ஏண்டா இப்டி கெட்டவார்த்தையா பேசுறே மூதேவின்னு கேட்டுப்புட்டா அம்புடுத்தேன்.. ஒன்னையாடி கேட்டேன், அவளுகளைத்தானடி கேட்டேன்னு ஆரம்பிச்சு, சின்னம்மாக்களைக் கேட்டமாதிரி ஒரு பத்துமடங்கு கேள்வி, அவுகளுக்குக் கெடைக்கும்.., அப்டி ஒரு அடங்காத குணம்… அவங்க அம்மாவும் பாவாவும் அவரைத் திருத்த முயற்சி பண்ணி, அவ்ளோ திட்டு வாங்கினதுக்கப்பறம், எப்டியோ தொலைன்னு விட்டுட்டாக…

இஷாவுக்கு அப்பறமா, சாப்ட்டுக்கீப்ட்டு எல்லாரும் படுத்தவொடனே, டேப்பை எடுத்துருவாரு காதரு…. கம்பீரமான குரல்ல சும்மா ஒரு மணிநேரம் சினிமாப் பாட்டாப் பாடுவாரு.. வித்தியாசமான ப்ளேலிஸ்ட்டு… பழசு, புதுசு, ஹிட்டு, யாரும்கேட்டே இருக்காத பாட்டுன்னு சும்மா கலக்கி எடுத்துப்புடுவாரு… இதுல என்ன விசேசம்னா, அப்பப்ப பாட்டுகளுக்கிடைல அவுக சின்னம்மா ரெண்டுபேரையும் நைஸா நொழைச்சுருவாரு.. அது நல்லமாதிரியும் இருக்கும், கெட்டமாதிரியும் இருக்கும்… அவர்ட்ட யாருபோய்க் கேக்குறது? இப்டித்தான் ஒருநாள் ராத்திரி பாடிக்கிட்டே இருக்காரு, இடையில ஒன்னும் செருகல் இல்லை, என்ன ஆச்சு இன்னிக்கு? ஏன் இன்னும் சின்னம்மாக்களை இன்னிக்கு கோர்த்தூடலைன்னு அந்த ஏரியாவைவே யோசிக்க வச்சிட்டாருன்னா பாத்துக்கிங்க… மணி பத்தை நெருங்கவும், யாரோ (ஒரு சின்னம்மாவாத்தான் இருக்கனும்) போதும் படுடான்னு சொல்றதும் கேட்டுச்சு.. நீ பொத்திக்கிட்டு தூங்குடி டேஷ்டேஷ் ன்னு சொல்லிட்டு கடேசிப்பாட்டு ஒன்னு பாடுனாரு பாருங்க: (அப்ப புத்தப்புதுசா ரிலீசான பாட்டு)

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க..
முழுப்பாட்டையும் பாடிட்டாரு… அப்பவும் சின்னம்மாக்களைப்பத்தி ஒன்னும் சொருகலை…
பாட்டையும் முடிச்சாரு… இப்டி…..:
என் காலம் வெல்லும்; வென்றபின்னே வாங்கடா வாங்க
வாங்……கடா வாங்க…
ஐசா வா…………ங்கடா வாங்க…
சவுரு வா………ங்கடா வாங்க….
ஐசா (ஆயிஷா)
சவுரு (ஸஹர்பான், இல்லைனா ஜஹுபர்னிசாவா இருக்கும்)
ரெண்டும் அவுக சின்னம்மாக்களோட பேரு….

கொஞ்சநாள்ல காதருதான் எங்க ஊருக்கு சஹர்ப்பக்ரிசாவா வந்தாரு.. அப்பறமா ரொம்பநாளா அவரைப் பாக்கலை.. சுமாரா ஒரு அஞ்சு பத்து வருசம் இருக்கும்.. எதிர்பாக்காத வகைல எதிர்பாக்காத இடத்துல அவரை சந்திச்சோம்.. எங்கத்தாவும் நானும்…

அந்த ஏரியாவுலேயே ஒரே வண்டிங்கிற ரேஞ்சுல எங்கத்தா எங்கூர்ல ஒரு மோட்டார் சைக்கிள் வச்சிருந்தாரு.. பிற்பாடு அவருதான் ரொம்ப்பேருக்கு வண்டியோட்டப் பழகிக்கொடுத்தாரு.. பலமாதிரி வண்டிகள்லாம் வச்சிருந்துட்டு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்ல செட்டில் ஆன நேரம் அது.. அவரு வண்டியை யாரையும் தொடக்கூட விடமாட்டாரு… அப்டியாப்பட்டவரு அவரு ஃப்ரண்டு ஒருத்தருக்கு வண்டியைக் கொடுத்துட்டாரு.. அதுவும் எந்த ஊருக்குன்னா, கிட்டத்தட்ட அறுபத்தஞ்சு கிலோமீட்டருக்கு அப்பால இருக்குற திருவாப்பாடிங்கிற ஊருக்கு,, இவரு சின்னப்புள்ளைல அம்மாபட்டினத்துல இருக்கும்போது அவரு பழக்கமாம்.. வயசு இவரைவிட ரொம்ப அதிகம்..அப்பப்ப அவரு எங்கவீட்டுக்கு வந்துட்டுப் போவாரு.. ஏதோ ஒரு கணக்குல வண்டியை மூனுநாளைக்குன்னு கொடுத்துவிட்டுட்டாரு.. வண்டி அஞ்சுநாளாகியும் வரலை.. சரி இனிமே சரியா வராதுன்னு கெளம்பிட்டாரு… பஸ்ல திருவாப்பாடிக்கு… வர்றியாடா தம்பின்னு என்னயக் கேக்கவும், நமக்கு கசக்குமா என்ன? தொத்திட்டேன்… மத்தியானம் கெளம்பி, சாயந்தரம் போய்ச்சேந்தோம்..

வண்டியைப்பாத்தா பாவமா இருந்துச்சு… ஸ்டாட்டாகலய்யான்னு சொன்னாரு… மெக்கானிக்கை வரச்சொல்லிருக்கேன் இன்னும் வல்லைன்னும் சொன்னாரு.. எங்கத்தா உக்காந்துட்டாரு… பிரிபிரின்னு பிரிச்சு என்னென்னவோ பண்ணி, சிகரெட் ஃபாயில் பேப்பரையெல்லாம் ஊஸ் பண்ணி, ஒரு மணிநேரத்துல வண்டியை ஸ்டாட் பண்ணிட்டாரு… ஒரேஒரு சின்ன சிக்கல்… எங்கெயோ அவரு விழுந்து எந்திரிச்சதுல ஹெட்லைட்டு கண்ணாடி, பல்பெல்லாம் ஒடைஞ்சிருந்துச்சு… சரிபண்ண முடியாது.. பரவால்ல போயிரலாம்னு கெளம்பிட்டோம்.. அரைவெளிச்சத்தோட கெளம்புனா ஆவுடையார்கோயில் வந்து சேரும்போதெல்லாம் நல்ல இருட்டு… எங்கெ சாப்டம்னு இப்ப நெனைப்பில்லை… டீக்குடிச்சிட்டு, சிகரெட் அடிச்சிட்டு கெளம்புனா இருட்டிருச்சு…. ஊர் எல்லை தாண்டுற வரைக்கும் ஒன்னுந்தெரியலை… ஒரு ரெண்டு கிலோமீட்டர் தாண்டுனவொடனே ரோடு தெரியலை.. வண்டில லைட்டும் இல்லை.. (இருந்தாலும் பிரமாதமாத்தான் இருக்கும்னு வைங்க)… அடுத்த ஊருன்னு எடுத்துக்கிட்டா ஏம்பல்தான்… ஆனா அதுவரைக்கும் போகமுடியான்னு இப்ப அவருக்கே யோசனையாப் போச்சு… என்னடா தம்பி பண்ணலாம்னு எங்கிட்ட கேட்டாரு.. போங்க பாப்போம்னு சொல்றேன் நான், பெரியமனுசன் மாதிரி… இன்னும் கொஞ்சதூரம் ஸ்லோவா போனோம்.. திடீர்னு ஒரு வெளிச்சம் தெரிஞ்ச்சிச்சு.. சுமாரா ஒரு மைலுக்கு அங்குட்டு… தம்பீ, என்னமோ லைட்டு தெரியுது ஆனா அங்கெ எதுவும் பெரிய ஊரு இல்லயேடான்னாரு… நான் மறுபடியும், போங்க பாப்போம்னு சொன்னேன்.. கிட்டக்க நெருங்க நெருங்க மைக்செட் லவுடுஸ்பீக்கர்ல பாட்டுன்னு ஒருமாதிரி சூழ்நிலை மாறிருச்சு… ஒரு ஆள் சைக்கிள்ல வந்தாரு.. அவர்ட்ட இது எந்த ஊரு என்ன விசேசம்னு கேட்டா, இந்த கிராமத்துக்குப் பேரு பாக்குடி… திருவிழா… வள்ளிதிருமணம் நாடகம் ஆரம்பிக்கப்போறாகன்னாரு…  போனா, ரோட்லேர்ந்து இருபது அடி ஆழத்துல, ஆறோ,கம்மாயோ தெரியலை, தண்ணி இல்லை, மணல்ல கூத்துக்கொட்டகை.. தம்பி, ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு, இருந்து கூத்துப்பாத்துட்டு விடியக்காலம் கெளம்பலாம்டான்னாரு.. ஆகா, ஊர்ல கூத்துப்பாக்கப் போனா என்னமாதிரி திட்டுவிய… இப்ப என்ன பண்ணுவியன்னு எனக்கு உள்ளுகுள்ள கும்மாளம்.. நாடக செட்டும் அப்ப ஃபேமசா இருந்த செட்டுகள்ல ஒன்னு…
எஸ்.எம் சொர்ணப்பா ராஜபார்ட் முருகன், பாக்கியலட்சுமி ஸ்ரீபார்ட் வள்ளி (ஒரு காது கருப்பாயிருக்கும்.. அந்தப்பக்கம் நெறைய பூ வச்சு மறைச்சிருக்கும்,,,) கேஎம்பி சண்முகசுந்தரம் ஆர்மோனியம் பின்பாட்டு, நடராசன் மிருதங்கம் அன் டோலக், தங்கவேலு பபூன் காமிக், டேன்ஸ் காமிக் யாருன்னு நெனப்பில்லை.. முக்கியமா நாரதர் கலைச்செல்வி.. எனக்கு ரொம்பநாளா பாக்கனும்னு ஆசை.. பொம்பளை எப்பிர்றா நாரதர் வேசம் போடும்னு… அன்னிக்கு எனக்கு செம லக்கு… நாங்க இருந்த சைடுல இருந்து இந்த வாத்தியகோஷ்டி உக்காந்த பகுதி தெரியாது… சென்டர்ஸ்டேஜுதான் தெரிஞ்சிச்சு..

ஒரு ரெண்டுமணி நேரமிருக்கும்… வள்ளி வந்தாச்சு, நாரதரும் வள்ளியும் தர்க்கம் ஆரம்பிச்சாச்சு…
திடீர்னு அண்ணே,,,,,,,ன்னு ஒரு கம்பீரக்குரல்… பாத்தா ஜிப்பாப்போட்டுக்கிட்டு நம்ம டேப் காதரு..
என்னண்ணே இந்தப்பக்கம், நாடகம் பாப்பியன்னு தெரியும், அதுக்காக இம்புட்டுத் தூரமா வருவிய?
தம்பீ, நல்லாருக்கியாடான்னு எனக்கு ஒரு வரவேற்பு… வண்டி லைட்டு எரியமாட்டேங்க்குதுடா காதரு,,, அதான் விடிஞ்சதும் போகலாம்னு உக்காந்துட்டோம்… அது சரி, நீ எப்டி இங்கெ வந்தே? உனக்கென்ன இங்கெ வேலைன்னு கேட்டாரு… என்னண்ணே இப்டிக்கேட்டுட்டிய? நான் இப்ப நாடகத்துக்கெல்லாம் டேப் வாசிக்கிறேன்ல? என்ன நாடகம் பாக்குறிய நீங்க….? எல்லா நாடக நோட்டிஸ்லயும் இருக்குமேண்ணே….

இப்பல்லாம் எம்பேரு வெறும் காதர் இல்லைண்ணே… டேப் காதர்
*

நன்றி : டேப்பு மஜீது

குலாம் அலைக்கும்! சரட்!! – மஜீத்

ஹாரிபிள் ஹஜ்ரத்துக்குப் பிறகு அடுத்த 18++ , காதர்பாய் ரொம்பக் கெஞ்சியதால்.

’வாழ்க்கை எது? / ஒருவர் கேட்டார். / மண்ணில் மேல் / பிறந்து – நடந்து / மண்ணுக்குள் / படுப்பதுதான் / என்றேன்’  என்பார் கவிஞர் இஜட். ஜபருல்லா. சார்ஜா மஜீதின் வாழ்க்கையோ யாரைப்பார்த்தாலும் இந்தமாதிரி படக்னு ’குலாம்’ சொல்வதுதான். இந்த மஜீதைப்  பார்க்கும்போது மாத்ருபூதம் சொன்னதுதான் ஞாபகம் வரும் (’சுஜாதாட்ஸ்’-ல் இருந்தது). டாக்டர் சொன்னாராம் :  ’சின்னதா இருந்தா என்னங்க.. ரெண்டு இஞ்ச் போதும்னு என் பேஷண்டுகளுக்கு காட்டிக்காட்டி விரலையே மடக்க முடியலே’ . சலாம்ஜான்! – ஆபிதீன்

***

குலாம் அலைக்கும்! சரட்!!

நான்தான் இப்பிடின்னா என்கிட்ட வந்து சேர்றதெல்லாம் அப்டித்தான் வந்து சேருது. அதுமட்டுமில்ல, நான் போய்ச் சேர்ற இடம் மட்டும் என்ன ஒழுங்கா?” அதுவும் அப்டித்தான்.

ஏதோ துபாய்க்குப் போய் ஒழச்சுப் பொழச்சுக்குவோம்னு அப்பாவியாய் வந்திறங்கி, ஒரு வேலைல சேந்தேன்ல, அப்பவே ஆப்கானிஸ்தான்ல தலிபான் ஆட்சியப் புடிச்சுட்டாங்க. ஆனா பாருங்க இது ரெண்டு சம்பவத்துக்கும் நேரிடையாவோ மறைமுகமாவோ ஒரு தொடர்பும் இல்ல.

இருந்தாலும், நான் வேலைபாத்த கம்பேனி துபாய்ல இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பலதரப்பட்ட சரக்குகளை ஏற்றுமதி பண்றதும் நான் அங்கே இருந்து பலதரப்பட்ட ஜோக்குகள இறக்குமதி பண்றதும் நடந்துகிட்டே இருந்துச்சு. இப்டித்தான் நீங்க மேல படிச்ச தலைப்போட மொதப்பாகம் வந்துச்சு.

அங்கே இருந்து ஒரு மானேஜர் அடிக்கடி இங்க வருவார். மீசைதாடியெல்லாம் இல்லாம முழு வழுக்கைத் தலையோட மொழுமொழுன்னு அவர் வரும்போதே அவர்ட்ட ஏதாவது வம்பிழுத்தாத் தேவலைன்னு தோணும். ஒருநாள் ஒரு ’கிறுக்முறுக்’ வேலைபாத்து அவரை ஒரண்டை இழுத்தேன். இங்க பாரு என்னயப் பத்தி ஒனக்குத் தெரியாது, அப்பறம் எங்க ஊர் காய்கறிக் கடைக்காரர் எங்கிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி நீயும் ஆயிருவேன்னு மிரட்டுனார். அதைச் சொல்லுய்யா முதல்லன்னு கேட்டேன். சொன்னார்;

அவர் பேரு குலாம்ஜான். ஒரு நாள் வேகமா போய் அவர்ட்ட, “சலாம்ஜான் குலாமலைக்கும்னேன்,

அவருக்கு லேசா நெருடுனாலும் முழுசா புடிபடலை.

அலைக்கும் சலாம்னார்.

எவ்வளவு கிலோ கத்தரி வெலை காய்னு கேட்டேன்.

அவர் 20 ஆப்கானின்னு சொன்னவுடனே பக்கத்துக்கடைப் பையன் சிரிச்சுட்டான். நான் ஏதோ தற்செயலா டங்கு சிலிப்பானது எனக்கே தெரியாதது மாதிரி, அந்தப் பையனை டேய் எதுக்குடா சிரிக்குறேன்னு அதட்டுறமாதிரி ஆக்டு குடுத்துட்டு, கத்திரிக்காய வாங்கிட்டு நடையைக் கட்டிட்டேன். அதுக்கப்புறம் அந்தப்பையன் போட்டுக்குடுத்துருக்கனும்; இப்பல்லாம் நான் போனாலே, எல்லா வேலயையும் விட்டுட்டு, என் வாயமட்டும் பாத்துக்கிட்டு, வெரப்பா நின்னுகிட்டு பேசுறார்னு சொன்னார். 

அந்தக் குசும்பர் ஒரு ஒன்ரை வருசத்துக்கப்புறமா வரும்போது பெரிய தாடியோடு வந்தார். நான் ஏதோ இந்தாளு இபாதத்தா இருக்குறாருன்னு நினச்சுக்கிட்டேன். அவர் ஊருக்குத் திரும்பிப் போற சமயத்துல ஒரு நைஸ் துணிய விரிச்சுக்கிட்டு அப்பப்ப, அதை மூஞ்சில வச்சு அழுத்திக்கிட்டு, கண்ணாடில பாத்துக்கிட்டு இருந்தார். ஏய்யா என்னாச்சு? என்ன பண்றே அடிக்கடி?ன்னு விசாரணயப் போட்டேன்.

அடப் போப்பா; இப்பல்லாம் பிரச்சினையா இருக்குப்பா; தாடி வக்கிறது கட்டாயம்னுட்டாங்க. அதுவும் ட்ரிம் பண்ணக்கூடாதாம். யாராவது ட்ரிம் பண்ணது தெரிஞ்சா அடிக்கிறாங்களாம்ப்பான்னார். அவுங்களுக்கு சந்தேகம் வந்தா ஆளக் கூப்பிட்டு அவுங்க மூஞ்சில மஸ்லின் துணியை வச்சு அழுத்துறாங்கப்பா. அந்தத் துணிவழியா தாடி மயிர் நொழஞ்சு வெளில வந்து நீட்டிக்கிட்டு இருந்துச்சுன்னா அவன் செத்தான், தர்ம அடிதான்னார். அதான் நான் செக் பண்ணிப்பாத்தேன்னார்.

இதெல்லாம் எப்பல இருந்துன்னு கேட்டேன். இப்பக் கொஞ்ச நாளாதான் எல்லாரும் தாடி வச்சுக்கிறனும்னு சொல்றாங்க; மொதல்ல கவுருமெண்டு ஆபீசர்களும் போலிசுக்காரங்களும்தான் கட்டாயம் தாடி வைக்கனும்னு சொல்லிருந்தாங்க. அப்பெல்லாம் நாங்க அதை வச்சு ஜோக்கடிப்போம்; இப்ப எங்களுக்கே இந்த நெலமைன்னு புலம்புனாரு. யோவ் ஒம்பொலம்பல நிறுத்திட்டு அந்த ஜோக்க சொல்லுய்யான்னு நச்சரிச்சேன்.
எடுத்துவிட்டார் பாருங்க:

ஒரு பஸ்ஸுல உக்காந்திருந்த எல்லார்க்கும் கண்டக்டர் டிக்கெட் போட்டுக்கிட்டே வந்தார். ஒருத்தர் சொன்னார், நான் டிக்கெட்லாம் வாங்க மாட்டேன், நான் போலிசுன்னார். அதுக்கு கண்டக்டர் அதுக்கு என்ன ஆதாரம்னு கேக்க, எம்மூஞ்சியப் பாத்தாத் தெரில? தாடி வச்சுருக்கேன் பார்னு மிரட்ற மாதிரி சொல்லவும், எதுக்கு வம்புன்னு கண்டக்டர் நகந்துட்டார். இதைப்பாத்த இன்னும் ரெண்டு எதார்த்த தாடிகளும் நானும் போலிசுதான்னு சொல்லி, டிக்கட்ட ஆட்டயப்போட்ருச்சுக. இதெல்லாத்தயும் சத்தமில்லாமப் பாத்துக்கிட்டு இருந்த ஒரு அராத்து, “ஆஹா, நமக்குத் தாடி இல்லையே, இருந்திருந்தா இந்நேரம் நம்மளும் டிக்கட்டை ஆட்டைபோட்ருக்கலாமே”ன்னு வருத்தப்பட்டுச்சு. கண்டக்டர் நம்மட்ட வரட்டும், ஏதாச்சும் பண்ணிப்பாப்போம்னு ஒரு முடிவோட இருந்துச்சு.

கண்டக்டர் வந்தார்; எங்க போகனும்? டிக்கட் வாங்கிக்கிங்கன்னார். உடனே நம்ம அராத்து என்ன சொன்னுச்சு தெரியுமா? நானும் போலிசுதான். டூட்டிலதான் இருக்கேன்னு சொன்னுச்சு. உடனே கண்டக்டர் இங்கபாரு, போலிசுன்னா தாடி வச்சிருக்கனும். ந்தா, அங்க பாரு, அவுகல்லாம் போலிசுதான், தாடி வச்சுருக்காங்க பாத்தியா? ஒழுங்கா ஏமாத்தாம டிக்கட்ட வாங்குன்னார்.

ஒடனே அந்த அராத்து ஒரு கண்ணை மட்டும் லேசா மூடி, கழுத்தை அவர் பக்கம் லேசா சாச்சு, யோவ் இங்க வாய்யா பக்கத்துலன்னு, குரலத் தாத்தி சொல்லுச்சு. கண்டக்டர் லேசா குனிஞ்சு, என்னய்யா, இப்ப சொல்லுன்னார். அதுக்கு அந்த அராத்து, “நான் ரகசிய போலிசுய்யா. சந்தேகம்னா நல்லாப் பாத்துக்கய்யா, ஆனா யார்ட்டயும் சொல்லாதே”ன்னு சொல்லிட்டு சரட் னு பேண்ட்டு ஜிப்பை இறக்கிருச்சு. கண்டக்டரும் சத்தமில்லாம நகந்துட்டார். (தலைப்போட ரெண்டாவது பாகம் இந்த ‘சரட்’தான்)

கதையை முடிச்சுட்டு என்னப் பாத்து கண்ணடிச்சார். இப்ப நான் நகந்துட்டேன்.

***

நன்றி : மஜீத் | ’சலாம்’ சொல்ல :   amjeed6167@yahoo.com

நண்டுப்பேன் – மஜீதின் ‘மருத்துவ’க் கட்டுரை

அன்புள்ள தாஜ், பேசாமல் ஆபிதீன் பக்கங்களை ’ஆபிதீன் பலபட்டறை’ என்று மாற்றிவிடலாமா? – ஆபிதீன்

***

நண்டுப்பேன்

மஜீத்

நண்பர் M. அப்துல்காதர் எப்பப் பாத்தாலும் எனக்கு “ஹாரிபிள்” வேணும், அதுவும் இப்பவே வேணும்னு ஆபிதீன்ட்ட ஒரே அடம். ஆனா நான் இதுக்கெல்லாம் மசியலை. அதுக்குக் காரணமும் அவுருதான். பின்னே என்னங்க? ஹமீது ஜாஃபர் நானாவோட மருத்துவக் கட்டுரைக்கு அவர் எழுதுன பாராட்டு என்னய பொரட்டிப் போட்ருச்சு. //மீண்டும் ஒரு மருத்துவ கட்டுரை நானாவிடமிருந்து….., அல்ஹம்துலில்லாஹ், பிரமிப்பாய் இருக்கிறது. நிறைய எழுத அல்லாஹ் நானாவுக்கு நீடித்த ஆயுளை தருவானாக!! ஆமீன்.//

ஜாஃபர் நானா திறமைக்கு அது சாதாரணம்தான். என் திறமைக்கு அதெல்லாம் நெனச்சுக்கூட பாக்கமுடியாது. இருந்தாலும் பாருங்க, இது மாதிரி நம்மளும் ஒரு பாராட்டு வாங்குனா எப்பிடி இருக்கும்னும் ஒரு கற்பனை, நம்மள சாய்ச்சுருச்சு.

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைம்பாங்கள்ல? அந்த மாதிரி, பொன்ன வக்கிற இடத்துல ’பு’வை வச்சுப்பாப்போமேன்னு துணிஞ்சிட்டேன்.
நம்ம தகுதிக்கு ஒரு மருத்துவக் கட்டுரை எழுதியே ஆகனும்னு ஒரே அரிப்பு.

அடடே, அரிப்பைப் பத்தியே எழுதுனா என்ன? சரி…. எழுதிடலாம்.

பாருங்க சார்.. இந்த அரிப்பு இருக்குதே…..(அடச்சே! என்ன இது? வாரச்சந்தையில லேகியம் விக்கிறவன் மாதிரி… ஆரம்பமே சரியில்லயே? மாத்திரலாம்)

சில நேரங்கள்ல சிலபேருக்கு இடம் பொருள் ஏவல் இல்லாம அரிப்பெடுக்கும். அவுங்க சொரிய முடியாம தவிக்கிறதப் பாத்தா பாவமா இருக்கும். இதுக்கெல்லாம் காரணம் சிலசமயம் ஒருவிதப் ‘பேன்’கூட காரணமா இருக்கலாம். அதுக்குப் பேரு ‘நண்டுப்பேன்’. ஏன்னா பாக்குறதுக்கு நண்டுமாதிரி இருக்கும்- படத்தைப் பாருங்க…… (ரொம்பச் சின்னதா இருக்கும். மைக்ராஸ்கோப்புலதான் நல்லா தெரியும்)


  
Pthirus pubis

(அது இருக்கிற இடத்தை வச்சு, நீங்களா ஒருபேரை வச்சுக்கக்கூடாது, சொல்லிபுட்டேன்)

‘பேன்’னு சொன்னாலே மயிர் இருக்கிற இடத்துலதான் அட்டாக் பண்ணும். தலைப்பேன் தலைல இருக்கிற மயிர்ல அட்டாக் பண்றமாதிரி, இது அட்டாக் பண்ற இடம்: ஆம்பள பொம்பளகளோட மயிர் இருக்குற ’மத்த’ இடங்கள். முதல்ல அரிப்புதான் வரும். அதோட எச்சம் நமக்கு ஒத்துக்காம வர்ற அலர்ஜிதான் காரணம். அப்புறம் ‘ஈர்’ நிறையா உருவாகி நம்மள படுத்திரும். (ஆமா, ஈரைப் பேனாக்கி, பேனைப்………………………..)

இதுக்கு permethrin 1% cream rinse and pyrethrins  இந்தமாதிரி மருந்தெல்லாம் இருக்கு. ஸ்பெஷல் ஷாம்புகூட இருக்கு- Lindane shampoo (1%). ஆனா எதுவா இருந்தாலும் நீங்களா வைத்தியம் பாத்துக்கக் கூடாது. இது இருக்கிறமாதிரி சந்தேகம் வந்துச்சுன்னா (இனிமே வராம இருந்துரும்???) நீங்க ஒடனே ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுக்கிட்டப் போய்த்தான் ‘காமிக்கணும்’

தலைப்பேன் மாதிரியே இதுவும் கூடப் “படுக்கிறவங்களு” க்கெல்லாம் பரவிரும். இதுக்கு ரொம்பப் புடிச்ச இடம் “அது”தான்னாலும், மயிர் இருக்கிற எல்லா இடங்கள்லயும் இது உக்காந்துக்கிரும். ஆம்பளைகளோட “கம்புக்கூடு”, மயிரு இருக்கிற வயிறு இதெல்லாம்கூட இதுக்கு வசதியான எடந்தான். ஈரு வைக்கிறதுக்கு, இந்த மாதிரி:


 
Pubic lice in genital area

 
 
Pubic lice on abdomen

அதெல்லாம்விடப் பெரிய பிரச்சினைன்னு நான் நெனக்கிறது… கண் இமை, மீசை, தாடிலயெல்லாங்கூடப் பரவிருமாம். நான் கொஞ்சம் எமோஷனல் டைப்புல்ல? அதான் நம்ம நண்பர்கள்ல யார் யாருக்கு மீசை-தாடில்லாம் இருக்கு? அவுகள்ள யார்யார் ரொம்ப “வேகமான” ஆளுகன்னு ஒரே யோசனையும் கவலையுமா இருக்கு….

இப்டித்தான் நான்  ஷூ பிரஷ் ன்னு ஒரு சிரிப்புக்கதை (அதுவும் மயிர் சம்பந்தப்பட்டதுதான் 🙂 🙂 ) எழுதப்போக ஒரு வாசகர் ‘மொஹத்தை’ வச்சுக்கிருவேன்னு சொல்லி உணர்ச்சிவசப்பட்டுட்டார். அதெல்லாம் நினச்சு எனக்கு ஒரே கவலை 😦 😦 .
 
ஒரு எச்சரிக்கை: இதைப் படிச்சதுக்கு அப்புறமா யாரும் யாரையும் தேவையில்லாம சந்தேகப்படக்கூடாது ஆமா. யாரவது தாடிக்குள்ள விரலைவிட்டு சொறிஞ்சா உடனே “அதுவா” இருக்குமோ? இவரு அப்புடி இருந்திருப்பாரோ?ன்னு யோசனையெல்லாம் பண்ணக்கூடாது. சொல்லிப்புட்டேன் ஆமா…… எதுக்குச் சொல்றேன்னா, 2% அல்லது 2.5% ஆளுங்களுக்குதான் இது இருக்காம். எல்லாரையும் சந்தேகப்படக்கூடாதுல்ல?

ஆஹா, முக்கியமான விசயத்தை மறந்துட்டேன் பாருங்க…… மருத்துவக்கட்டுரைன்னா, ரெஃபரன்ஸ் லிஸ்ட் குடுக்கணும்ல? அதாங்க ”அடி”க்குறிப்பு…அடியில் கண்ட எல்லாமே நான் சொன்னது இல்லங்க.. விக்கிலீக்ஸ்ல, அடச்சே, விக்கிப்பீடியாவுல இருக்குங்க…

Notes:

  1. ^ Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. ISBN 1-4160-2999-0.
  2. ^ Weiss RA (10 February 2009). “Apes, lice and prehistory”. J Biol 8 (2): 20. doi:10.1186/jbiol114. PMC 2687769. PMID 19232074. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pmcentrez&artid=2687769.
  3. ^ Manjunatha NP, Jayamanne GR, Desai SP, Moss TR, Lalik J, Woodland A (June 2006). “Pediculosis pubis: presentation to ophthalmologist as pthriasis palpebrarum associated with corneal epithelial keratitis”. Int J STD AIDS 17 (6): 424–6. doi:10.1258/095646206777323445. PMID 16734970. http://ijsa.rsmjournals.com/cgi/pmidlookup?view=long&pmid=16734970.
  4. ^ Klaus S, Shvil Y, Mumcuoglu KY (March 1994). “Generalized infestation of a 3½-year-old girl with the pubic louse”. Pediatr Dermatol 11 (1): 26–8. doi:10.1111/j.1525-1470.1994.tb00068.x. PMID 8170844.
  5. ^ Varela JA, Otero L, Espinosa E, Sánchez C, Junquera ML, Vázquez F (April 2003). “Phthirus pubis in a sexually transmitted diseases unit: a study of 14 years”. Sex Transm Dis 30 (4): 292–6. doi:10.1097/00007435-200304000-00004. PMID 12671547. http://meta.wkhealth.com/pt/pt-core/template-journal/lwwgateway/media/landingpage.htm?issn=0148-5717&volume=30&issue=4&spage=292.
  6. ^ Commission for Environmental Cooperation. North American Regional Action Plan (NARAP) on lindane and other hexachlorocyclohexane (HCH) isomers. November 30, 2006. North American Commission for Environmental Cooperation
  7. ^ a b Lindane shampoo, USP, 1% prescribing information. Updated March 28, 2003.
  8. ^ (FDA). Lindane Post Marketing Safety Review (PDF). Posted 2003.
  9. ^ Workowski KA, Berman SM (August 2006). Ectoparasitic infections. “Sexually transmitted diseases treatment guidelines, 2006”. MMWR Recomm Rep 55 (RR–11): 79–80. PMID 16888612. http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/rr5511a1.htm.

10. ^ Anderson AL, Chaney E (February 2009). “Pubic lice (Pthirus pubis): history, biology and treatment vs. knowledge and beliefs of US college students”. Int J Environ Res Public Health 6 (2): 592–600. doi:10.3390/ijerph6020592. PMC 2672365. PMID 19440402. http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?tool=pmcentrez&artid=2672365.

***

நன்றி : மஜீத் | அரிப்புக்கு :   amjeed6167@yahoo.com

chitiyan chityian : குறிப்பாய் அந்த ஹம்மிங்…

மஜீத்

இந்தப் பாட்டை லேசாக் கேட்டுட்டு, தேட ஆரம்பிச்ச ‘ஆசிரியர்’ (’யோவ்…’ – AB)  கூட நானும் நாயா அலஞ்சு தேடி, கண்டுபிடிச்சா………………….இந்த விபரமும் கிடைச்சது: Album: “Global Spirit”   Artist: Karunesh  Song: Punjab யார்ரா இந்தக் “கருனேஷ்”? னு தேடுனா………….. ஜெர்மன் காரராம்; ஓஷோ சிஷ்யன். Interesting… Isn’t it?

***

தாஜ் :

வித்தியாசமான பஞ்சாப் பாடல்.
திரும்பத் திரும்ப
ஒரே வரியைப் பாடல்களாகக் கொண்ட பஞ்சாபில்
இப்படியும் பாடல்கள் இருப்பதை இன்றே அறிந்தேன்.
ரசனையோ ரசனை.
குறிப்பாய்…..
அந்த ஹம்மிங்.

***

மஜீத் :

ஆமா, நீங்க சொன்னதுமாதிரி அது ரொம்ப வித்தியாசமான பாடலேதான். தனது விருப்பத்துக்கு மட்டும் முக்கியம் கொடுத்து பெண்ணின் விருப்பத்துக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காது மணம் புரிவிக்கும் தந்தையும்,  முழுசுதந்திரத்தோடு தனது மணாளனை கொண்டுவந்துதன்முன் நிறுத்தும் பெண்ணை வாழ்த்தும் தந்தையும், பரிமாறிக்கொள்ளும் பார்வைகளின் அர்த்தங்கள் பாடலின் இறுதியில் பரிணமளிக்கும் அழகே அழகு. பாடலாசிரியர்: தேஜால் அரோராஇசை: Bruno Reuter என்ற கருணேஷ்(பிறப்பால் ஜெர்மானியர்)முழுவிபரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Karunesh 

முழுப்பாடலும் கீழே:

aao huzoor tumko sitaron mein le chalun,
dil jhoom jaye aise baharon mein le chalun ,
aao huzoor tumko sitaron mein le chalun ,
dil jhoom jaye aisee ,huzzoor aayo
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

haye ve mere dadya rabba, babul tere kina ne lai janiya haye , haye ve mere dadeya rabba mahlan vichon teri lado loyiiiiiiiiiii.
chitiyan chityian babul tere mahlan vichon teri lado kina jamiyan, desh to udiyan , chitiyan chitiyan vichon teri lado kina ne lai janiyan haye loyiiiiiiiiiii.

***

கேட்க :

 Download MP3

***

***

Video Uploaded by on Jul 31, 2006

« Older entries