காதுகளைப் பொத்திக்கொண்டு ஒரு காதுபாத்திரம், மன்னிக்கவும் , கதாபாத்திரம் சரியாகவே சொல்கிறது இந்தப் பழைய கதையில் : ‘எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு வீட்டுக்குள் முப்பது முஸ்லிம்களை பூட்டிவச்சு 31-வது நாள் திறந்து பாத்தா முப்பது முஸ்லிம்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டு செத்து போய் கிடப்பாங்க!’
’சீமான்’ 13-ம்ஆண்டுவிழா மலரில் வெளியான ஆர்னிகா நாசரின் சிறுகதையை கோமான்களுக்காக பதிவிடுகிறேன். ’இதுதான் அல்லாட வேலைங்குறது. அந்த புக் ரெண்டுவாரமா என் ரூமுலெதான் கெடந்திச்சி. திரும்பியே பாக்கலே. உங்கட கண்ணுக்கு கரெக்டா இந்த கதை இந்த டயத்துலெ கிடைக்கிது பாருங்க!’ என்று வியந்தார் ஜாஃபர்நானா. அனைவருக்கும் அல்லாஹ் உதவுவானாக, ஆமீன்!
’அல்லாவ விடுங்க, கதை எப்படி நானா?’
’நல்லாவே குத்துறாரு நாசரு!’
***
நன்றி : ஆர்னிகா நாசர், ‘சீமான்’
நன்றி : ஜாஃபர்நானா (படுக்கவைத்து ’ஸ்கேன்’ செய்ததற்காக!)