திட்டச்சேரி ஹாஜாவின் தேன்குரல்

அசனா மரைக்காயர் மூலமாக அருட்கொடை வந்து விழுந்துவிட்டது காலையிலேயே.  ‘பிறை காட்டும் ரமலான்’ பாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட A.R ஹாஜா பாடிய பாடலுக்கான சுட்டி அனுப்பியிருந்தார். அதைத் தவிர மற்ற பாடல்கள் நன்றாக இருந்தன! முக்கியமாக, ‘இணைகள் இல்லா குர்ஆன் ஞானபோதம் , இறைவன் அருளாலேதான் வந்த வேதம்…’ என்ற பாடல். கேட்டுப் பாருங்கள். ஒரான் பாமுக்கின் குதிரையுடன் நாளை வருகிறேன் 🙂

**

**

நன்றி : அருட்கொடை

காலமானார் நம் கவிஞர் சலீம்…

salim-mama2முன்னவனை முன்வைத்து…!‘ என்று பதிவிட்டு முழுதாக மூன்று வாரங்கள் முடியவில்லை. நம் பேரன்புக்குரிய கவிஞர் சலீம் மாமா அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்கள். தம்பி தீனிடமிருந்து காலையிலேயே அதிர்ச்சி தரும் மெயில்  . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியுன்… மாலை 4.30க்கு நாகூரில் நல்லடக்கம் நடைபெறுகிறது. அவர்களின் மறுமை வெற்றிக்கு அனைவரும் துஆ செய்வோம்.

வஸ்ஸலாம்

தொடர்புடைய பதிவுகள் :

காதில் விழுந்த கானங்கள்

நெகிழவைத்த நாகூர் சலீம் !

இறைவனும் இருட்டும் – அப்துல் கையூம்

நாகூர் தந்த கொடை – (கவிஞர் சலீம் பற்றி ) நாகூர் ரூமி

***

நீரில் ஒரு குமிழி

கவிஞர் சலீம் இயற்றி ஈ.எம்.ஹனீபா பாடியது

இன்று வந்து நாளை போகும்
நிலையிலே நிலையிலே
என்ன செய்து வாழுகின்றாய்
உலகிலே உலகிலே…

– இன்று வந்து

வந்த நோக்கம் இன்னதென்று தெரியுமா
வல்ல இறைவன் சொன்ன மார்க்கம் புரியுமா
வந்த இடத்தில் சொந்தம் கொண்ட மயக்கமா
வாங்கி வந்த கடனைத் தீர்க்கத் தயக்கமா
வரம்பு மீறிப் போவதென்றால் முடியுமா..? முடியுமா..?

– இன்று வந்து

கருணைநபிகள் புரிந்த தியாகம் மறையுமோ
கர்பலாவைக் கண்டகண்கள் மகிழுமோ
அருமை உமரின் துயரம் விரைவில் ஆறுமோ
அலீயின் வீரம் நெஞ்சினின்றும் மாறுமோ
இவைகள் யாவும் யாருக்காக? சொல்லுவாய் சோதரா!..

– இன்று வந்து

ஏதுக்காக இறைவன் உலகை ஆக்கினான்
யாருக்காக நபியை இங்கே அனுப்பினான்
தீதுசெய்து மனிதக்கூட்டம் நோகவோ?
தாவிப் பாயும் நரகத் தீயில் வேகவோ?
வேதக் குர்ஆன் பாதை மீது செல்லுவாய் சோதரா!

– இன்று வந்து

முன்னவனை முன்வைத்து…! – கவிஞர் சலீம்

இந்தப் பாடல் கலைமாமணி கவிஞர் சலீம் அவர்கள் இயற்றி திருச்சி எஸ்.எம்.யூசுப் பாடியது .  திடீரென்று இந்தப் பாடலை இப்போது இங்கே பதிவிடுவதற்கு காரணம் இருக்கிறது. நம் சலீம்மாமாவுக்கு உடல்நலம் சரியில்லை. ஆஸ்பத்திரியில் அவர்களை பார்த்து வந்ததிலிருந்து சங்கடமாயிருக்கிறது மனசு. ’காதில் விழுந்த கானங்கள்’ நூலிலிருந்து கண்ணில் பட்ட ஒன்றை டைப் செய்து பதிவிடுகிறேன்.  துஆ செய்யுங்கள். நன்றி. – ஆபிதீன்

***

ஏகநாயனை முன்னே வைத்து
எந்தக் காரியமும் தொடங்குங்கள்!
ஆகுவதெல்லாம் அவனால் தானே
ஐந்து வேளையும் வணங்குங்கள்!

– ஏகநாயனை

சொர்க்கம் விரும்பி வணக்கம் புரியும்
சுயநலப் போக்கை நிறுத்துங்கள்! – அந்த
நரகத்துக்கஞ்சி வழிபடுகின்ற
நெஞ்ச உணர்வுகளைத் திருத்துங்கள்!
அவனுக்காகவே அவனை வணங்கும்
அச்சப் பாட்டைப் பொருத்துங்கள்!
கவனம் இருக்கட்டும் கடமை உணர்வோடு
காரியம் யாவும் நடத்துங்கள்!

– ஏகநாயனை

பக்தியுள்ளவன் ஏழையென்றாலும்
பெரிதும் அன்போடு பழகுங்கள்! – பணச்
சக்தியுள்ளவன் பக்தியை இழந்தால்
சரிப்பட்டு வராது விலகுங்கள்!
அக்கம் பக்கம் உறவினர்க்கெல்லாம்
ஆவன செய்து உதவுங்கள்!
அக்கரைச் சீமை போய்விடு முன்னம்
அல்லா(ஹ்)வின் நினைவில் உலவுங்கள்

– ஏகநாயனை

***

saleem-mama-book-cb2

கந்தூரி ஸ்பெஷல் : காணிக்கை நிலைத்த கதை

கந்தூரியைக் களமாக வைத்து ஆபிதீன் எழுதிய ‘கடை’ படிக்காதவர்களுக்கு இந்தக் கதை தரப்படுகிறது.  எழுதியவர் மர்ஹூம் எஸ்.எஸ்.அலீ (கமலப்பித்தன்) . நூல் : ‘மாபெரும் ஞானி நாகூர் யூசுஃப் தாதா’. கதைக்கு ஆதாரம் கேட்பவர்கள் கந்தூரி பற்றி கவிதை எழுதிய ஜபருல்லாநானாவை தொடர்பு கொள்ளலாம். கண்டிப்பாக ‘தப்ரூக்’ கிடைக்கும்! சரி, இன்றைய ஸ்பெஷலாக கவிஞர் சலீம் எழுதி  ஈ.எம். ஹனீபா பாடிய பழைய பாடல் இங்கே உண்டு. கேட்டுக்கொண்டே வாசியுங்கள் – வாசல் தேடிப் போக.  மதிப்பிற்குரிய நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள் நாகூர் சேத்தானுடன் இணைந்து பாடிய  ‘வாராரே வாராரே ஞானக்கிளியே’ பாடல் , இன்ஷா அல்லா, ஹத்தத்திற்கு  வரும். அஹ்ஹஹ்ஹாங்….. கூடு வருது பாருங்கடி….! – ஆபிதீன்

***
ஈ.எம்.ஹனீபா பாட்டு : உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே…

***
இறைவன் ஒருவனைக் கடுமையாய்த்
தண்டிக்க நாடினால் அவன் மனத்துள்
இறைநேசர்களைப் பற்றித் தாழ்வான
எண்ணத்தை உண்டாக்கி விடுகிறான்

– மவுலானா ஜலாலுத்தீன் ரூமி
***

nagoe-dargah

காணிக்கை நிலைத்த கதை

ஒரு கட்டத்தில் , ‘ரிக்வத் என்கிற அற்புதத் திருவோட்டை இன்னொரு கூட்டத்தின் உபயோகத்திற்காக (ஷாஹூல் ஹமீது) பாதுஷா நாயகம் தானம் செய்துவிட்ட பிறகு, ஃபக்கீர்களின் உணவு முதலிய தேவைகள், பாதுஷா நாயகத்திற்கு அன்பர்கள் கொண்டு வந்து சமர்ப்பிக்கிற காணிக்கைப் பொருட்களைக் கொண்டு நிறைவேறி வந்தன.

சமயங்களில் ஃபக்கீர்மார்கள், நாகப்பட்டினம் முதலான சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று தம் தேவையை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

அந்த ஆரம்ப நாட்களில் இருந்து பாதுஷா நாயகத்தை மிகவும் பெருமைபடுத்திக் கொண்டாடிய சிறப்பு நாகப்பட்டினம் வாசிகளுக்கு உண்டு. சின்ன எஜமான் தம் ஊருக்கு விஜயம் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தை ஃபக்கீர்களிடம் அடிக்கடி தெரிவிப்பார்கள்.

இருந்தும் தாதா நாயகம் தம் தந்தையை விட்டு எங்கும் செல்வதில்லை. உள்ளத்தாலும் உடலாலும் சுத்தத் துறவியாயிருந்த அவர்கள் மனத்துள் வேறு ஆசை எதுவும் இல்லாமல் இருந்ததும்தான் காரணம்.

எனினும், ஃபக்கீர்களின் நச்சரிப்பு தாளாமல் தந்தையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ஒரு நாள் நாகப்பட்டினம் போய்வரத் துணிந்தார்கள்.

இச்செய்தி நாகப்பட்டின வாசிகளைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திற்று. தெருவெல்லாம் தோரணம் கட்டி வள்ளல் பாதுஷாவின் மைந்தரை வரவேற்றார்கள். மாலை போட்டு மரியாதை செய்தார்கள். ஊர் கூடி விருந்தளித்தார்கள்.

கடைசியில் ஒரு தாம்பாளத்தில், வெள்ளியும் பொன்னும் பணமும் கொண்டு வந்து தாதாநாயகத்தின் எதிரே வைத்து “இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்” என வேண்டினார்கள்.

“இல்லை; சன்மானம் பெற்றுக்கொள்ள நான் அனுமதி பெற்றிருக்கவில்லை” என்றார்கள் தாதா நாயகம்.

“இது சன்மானம் அல்ல; உங்கள் தந்தைக்குச் சேர வேண்டிய காணிக்கை. தந்தைக்கு உரியதை மைந்தரிடம் ஓப்படைக்கிறோம்” என்றார்கள்.

பாதுஷா நாயகத்திற்கு தினந்தோறும் காணிக்கைப் பொருட்கள் வந்தாலும், அவற்றை வள்ளல் நாயகமோ தாதா நாயகமோ கை நீட்டி வாங்குவதில்லை. கொண்டு வருகிறர்கள் அவற்றை ஆண்டவர்களுக்கு எதிரே வைத்து விட்டுச் செல்வார்கள். அல்லது ஃபக்கீர் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போவார்கள்.

இந்த நடைமுறையை அனுசரித்து மாத்திரம் தாதா நாயகம் அப்படி மறுக்கவில்லை; தந்தையாரிடம் முன் அனுமதி பெறாத ஒரு காரியத்தை எப்படிச் செய்வது என்று தயங்கினார்கள்.

வற்புறுத்தலும் மறுப்பும் நிகழ்ந்து கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் ஃபக்கீர் ஒருவர் குறுக்கிட்டு, “இவற்றைப் பெற்றுக் கொள்வதால் தங்கள் தந்தையார் கோபித்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னவானாலும் இவை உங்களுக்குச் சேர வேண்டிய பொருள்கள்தானே?” என்று சமாதானம் செய்தார்.

அல்லாஹ் நாடி விட்டான்.
தாதா நாயகம் கைநீட்டி விட்டார்கள்.
தங்கக் கிணறு வற்றியது.

இச்செய்தி செவிப்பட்டதும் பாதுஷா நாயகம் யோசனையுடன் மௌனமானார்கள். மைந்தரை இரக்கத்துடன் பார்த்தார்கள். சொன்னார்கள் : “அல்லாஹ்வின் நாட்டம் முந்திவிட்டது.”

“நான் தவறு செய்து விட்டேனா?” எனக் கைகளைப் பிசைந்து கொண்டார்கள் தாதா.

வேதனைச் சிரிப்புடன் பாதுஷா சொன்னார்கள்: ”மகனே, நீரும் உமது சந்ததியினரும் உலகத் தேவைகளுக்காகச் சிரமப்படாதிருக்கக்கூடிய ஒரு ரகசியத்தை உமக்கு கற்றுத் தர நாடியிருந்தேன். இறை நாட்டம் வேறு விதமாகிவிட்டது., நீரும் உமது சந்ததியினரும் கைநீட்டித்தான் வாழ வேண்டும் என்று இறைவன் நாடி விட்டான். அல்ஹம்துலில்லாஹ்! ஆனாலும் மகனே, நீர் வருந்த வேண்டியதில்லை. எனக்கென்று வரக்கூடிய காணிக்கைப் பொருட்களுக்கு முடிவே கிடையாது. அவற்றை உமக்கும் உமது சந்ததியினருக்கும் வல்ல நாயன் ஹலால் ஆக்கி வைத்துள்ளான்.”

***
நன்றி : ஹாஜி A.T. அலிஹஸன் சாஹிபு பைஜீ , அசனா மரைக்காயர்

***

தொடர்புடைய பதிவு :
இந்த ஹந்திரி இருக்கே… – ‘நாகூரி’

« Older entries