சொக்கவைத்த யுவன் சந்திரசேகரின் ‘நினைவுதிர் காலம்’ நாவலில், ‘உங்களுக்குப் பிடித்த இளைய தலைமுறைக் கலைஞர்கள் யார்?’ என்ற கேள்விக்கு இசைக்கலைஞர் ஸ்ரீ ஹரிசங்கர் தீட்சித் இவளைக் (தப்போ? சரி இவரை!) குறிப்பிடுகிறார். ‘சாஷ்வத் மண்டல் அபூர்வமான பாடகி. லேசாக ஆண்மையும், ரகசியமும் கொண்ட குரல். உலுக்கியெடுத்துவிட்டாள். ஏனோ அவள் பெயரை நான் அதிகம் கேள்விப்படுவதில்லை’ என்கிறார் (P.253). எனக்கும் அவர் சொல்லித்தான் தெரியும். கேட்டு அசந்துவிட்டேன். யூட்யூபில் தொடர்ந்து கேட்டு, ‘ Shashwati Mandal பாடுறத கேட்டு கள்ளு குடிச்ச கொரங்கு மாதிரி ஆயிட்டேன் புள்ளே… ‘ என்று அஸ்மாவிடம் காலையில் சொன்னேன். ‘கொரங்கு கொரங்காத்தானே ஆவும்’ என்றாள் தீர்மானமாக! ஒரு சாம்பிள் நீங்களும் கேட்டுப்பாருங்களேன். நண்டி!
Shashwati Mandal performs Raag Poorvi
*
Thanks to First Edition Arts Channel
நினைவுதிர் காலம் (P.180): ‘நாத சம்மான்’ விருதுத் தொகையைச் சரிபாதியாகப் பிரித்து, ராவல்பிண்டியிலுள்ள ஹஸ்ரத் பாரி இமாம் தர்ஹாவுக்கும் பனாரஸின் விஸ்வநாதர் கோயிலுக்கும் வழங்கிய தீன் சகோதரர்களில் மூத்தவரான கியாஸூத்தீன் சாஹேப் சொன்னது :
நாங்கள் அர்ப்பணிக்கும் இசையை ஏற்கும் இறைவன் நிஜமாகவே அருவமானவன். அவன் எங்களையும் அறிவான், எங்கள் கைகளைப் பிரிக்கும் கயிறுகளையும் அறிவான்… அறுத்தெறிந்து விடுவிக்க ஒரு கணம் போதும் அவனுக்கு…
—-
நன்றி : யுவன் சந்திரசேகர்.