மூணு நாளைக்கு குலாம் அலி – ஆஷா போஸ்லே!

‘அரபுநாட்டுலேர்ந்து ஊருக்கு வந்த ஒடனேயே வீண் செலவு செய்யிறதுக்குன்னு ஒரு ‘டூ..ர்…ர்ர்ரு.’.. ஒடம்புக்கும் காசுக்கும் கேடு வேற. அட, சொன்னா கேக்கவா போறானுவ?’ என்று தன் மகன்களைப் பற்றி சத்தமாகப் புலம்பிக்கொண்டிருந்த என் தாய்மாமா , ‘இன்னக்கி டூர் போறேன் மாமா’ என்று நான் சொன்னதுமே , ‘ஆஹா, கண்டிப்பா. டூர் போயே ஆவனும். அப்பத்தான் ஒடம்பும் மனசுக்கும் ராஹத்தா இக்கிம், இந்த அஹோர வெயிலுக்கு. வரட்டா? ‘ என்று சொல்லிவிட்டு முனகியபடி கிளம்பினார். மூணு நாளைக்கு நிம்மதியாக இந்த ‘மீராஜ்-ஏ-கஜல்’ஐக் கேட்டுக்கொண்டிருங்கள். ‘தரங்கம்பாடி’ வரை போய்விட்டு வந்து விடுகிறோம்! – ஆபிதீன்

***

Thanks to jatils

***

Thanks to : Saregama

*

updated on 31.07.2019

பத்தா லகா மைனு…

முறையீடு சோகமாக இருக்கிறதென்று நண்பர்கள் முறையிடுகிறார்கள். அதனால் இது. ‘ஹே ஷைத்தான்’ கதையில் வரும் ‘ஒரே நம்பிக்கையில் ஓடிவந்தேன் நாதா’ (வாஹித் பாடியது. பிறகு பதிவிடுகிறேன்) பாடல் இந்த மெட்டிலிருந்துதான் உருவாயிற்று. கொண்டாடுங்கள்!


 

Thanks to kharabatafghanistan

ஏன் இந்த சோதனை நியாயமா?

அஸ்மாவையும் பிள்ளைகளையும் பிரிந்து ஓரிரு நாளில் துபாய் போகிறோமே என்று மனசு சரியில்லாமல் ஜபருல்லாநானாவை பார்க்கப் போனால் ’இவ்ளோ சளியும் காய்ச்சலும் வச்சிகிட்டு ஏங்கனி போறா?’ என்று அதட்டி, என் நெஞ்சு முழுதும் விக்ஸ் பூசினார். பூசியதோடு நில்லாமல் ‘இத கேளுங்கனி’ என்று குலாம் அலியின் ’ஏ ஹுஸ்னு பே பர்வா’ கஜலைப் போட்டார். அத்தோடு விட்டிருக்கலாம். அதே டியூனில் – மர்ஹூம் வாஹித் கேட்டதற்கிணங்க – தான் இயற்றிய பாடலையும் பாடிவிட்டார். துக்கம் எல்லை கடக்காமல் என்ன செய்யும்?!

***

ஏன் இந்த சோதனை நியாயமா?
ஏழை என் நெஞ்சம் தாங்குமா?
வல்லோனே உனக்கிது ஆகுமா?
வளம் எந்தன் வாழ்வில் கூடுமா?

(ஏனிந்த)

எல்லோரும் நலம்பெற வேண்டினேன்
எழிலான கவிதைகள் பாடினேன்
வீணே என் திறமைகள் மாய்வதா?
விதியே என்றெண்ணி ஓய்வதா?

(ஏனிந்த)

அழவைக்கும் அடுத்த சரணத்தை அப்புறம் பதிவிடுகிறேன். ஒரிஜினல் கஜலைக் கேளுங்கள். இது சும்மா காதல் சமாச்சாரம். இறைக்காதலோ ? இஸ்மாயில்பாய், அர்த்தம் சொல்லுங்கள் . எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை. இசையமைத்தது தாலிப் ஹுசைன்; குலாம்அலி அல்ல என்று ஒருவர் கருத்து சொல்லியிருக்கிறார். இருக்கலாம். பிறர் இசையமைப்பில் எத்தனையோ பாடல்கள் குலாம்அலி பாடியிருக்கிறார். ’கொலவெறி’யோடு அலைபவர்கள் கலைவெறியோடு குலாம்அலி பாடும் கஜலைக் கேட்பார்களாக!

Download

குலாம் அலி கஜல்

Download

***

எச்சரிக்கை : அடுத்த பதிவு , ஜபருல்லாவின் கவிதைகள் 🙂