Ustad Salamat Ali Khan – Raag Megh – performance at Berlin, Germany (1974) * 2020-ஆம் வருடத்தில் நான் கேட்ட அற்புதமான கச்சேரி , சௌராஸியா ’கரானா’வைச் (கொரோனா அல்ல) சேர்ந்த உஸ்தாத் ஸலாமத் அலி கான் அவர்களின் இந்தக் கச்சேரிதான். ’இஸ்ஸே ஊப்பர் மைனே குச் நஹி ஸுனா’ என்று சஹில்பாய் கொடுத்த கமெண்ட்டை வழிமொழிகிறேன். இவரின் வாரிசுகள் இப்போது யாரும் இல்லையா என்று வாஸிம்பாயிடம் கேட்டதற்கு ‘லட்டம் பட்டம்’ என்று பஞ்சாபியில் ஏதோ சொல்லிவிட்டு ’பைசா கா ச்சக்கர்மேங் அப்னா லைன் ஹட்கயா சார்ஜீ’ என்றான் ஹிந்தியில். இது கொஞ்சம் புரிந்தது. கேளுங்கள் பொறுமையோடு. புதுவருடம் சிறக்கும், இன்ஷா அல்லாஹ். – AB
Nadaswaram vidvan, Sri Pillappan, performing Nadaswaram music beautifully inside a temple. Have not heard music more beautiful than this in recent times. Unalloyed and unsullied by anything. – indiaviews
*
Kay Vee in FB :
சஹானாவின் சாரல்
—–
இன்னும் முறையான கோடை காலம் ஆரம்பிக்கவில்லை , வசந்தத்தின் ஓரிரு வாரங்கள் இன்னும் மீதமிருக்கிறது . இத்தோடு நீண்ட கால பருவநிலை மாற்றமான La Nina வும் இந்த வருடம் தொடங்கியிருப்பதால் ஒரே கலவையாக வானிலை மாற்றங்கள் , தெளிந்த வானம் கொண்ட காலைகள் , இடி மழையான மதியங்கள் , வெது வெதுப்பாக நீராவி மணம் அடிக்கும் மாலைகள் என்று யாரோ ரிமோட்டை அழுத்தி விளையாடுவது போலாகிவிட்டது வானிலை
இன்று காலை கார் டீலர்ஷிப்பில் ஒரு சின்ன வேலைக்காக வண்டியை விட வேண்டியிருந்தது , வேலை முடிய ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள் காத்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள் . அங்கேயே உட்கார்ந்து ஏதாவது வாசித்துக்கொண்டிருந்திருக்கலாம் . இல்லை ஒரு சின்ன நடை போய்விட்டு வருகிறேன் என்று கிளம்பினேன் .
கிளம்பிய ஓரிரு நிமிடங்களிலேயே நல்ல மழை . திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்து முடிப்பதற்கும் வந்த வேகத்திலேயே மழை நின்று விட்டது . சரி வந்தால் வரட்டும் என்று ஹெட்போனை மாட்டிக்கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டேன். வெறேதோ பாட்டு கேட்டுக்கொண்டிருக்கு யூடியூபில் அதுவாக தேர்ந்தெடுத்து அடுத்து இந்த நாதஸ்வர இசையில் வந்து நின்றது .
யார் வாசித்தது என்று கூட பார்க்கவில்லை ஆனால் அந்த பத்து நிமிடங்களில் அப்படியே மெய்மறக்க வைத்து விட்டது , எதிர்பாராமல் கேட்கக் கிடைக்கும் நல்லிசை ஒரு வரம் . திரும்ப வரும் வரை பலமுறை இதையே மீண்டும் மீண்டும் கேட்டிருந்தேன். அற்புதமான சஹானா ஆலாபனை . அப்படியே எல்லாவற்றையும் கழுவி விட்டதுபோன்ற உணர்வு , தன்னென்று இருந்தது .
கேட்டுப் பாருங்கள்.
இந்த அருமையான சஹானாவை முன்பே பகிர்ந்திருந்தேன்.நிறைய சிற்றூர் கோவில்களில்,திருமண வீடுகளில் பிரமாதமாக நாதஸ்வரம் வாசிப்பவர்களைப் பார்க்கிறேன்.இவர்களுக்கு ஏன் அங்கீகாரம் இல்லை என்பதே வேதனை.சென்ற வருடம் பிரமாதமாக நாதஸ்வரம் வாசித்த இரு பெண்களை மதுரையில் சந்தித்தேன்.
சஹானாவை எளிதாக விளங்கிக் கொள்ள சில திரைப் பாடல்கள்.
வீர அபிமன்யு படத்தின் பார்த்தேன் ,சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்.
பார்த்தாலே பரவசம் திரைப் படத்தின் அழகே சுகமா
ரயில் சினேகம் தொடரின் இந்த வீணைக்குத் தெரியாது.
பெரு மழைக்காலம் மலையாளப் படத்தின் செந்தார்மிழி.
புதுவருட வாழ்த்துகள்! 12 வருடங்களுக்கு முன்பு ஆசியாநெட் சேனல் மூலம் நான் ரிகார்டிங் செய்த இசை நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த வருட Asia Net Star Singer Winner இந்த நஜிம் அர்ஷாத் (இறுதிச் சுற்றில் பாலமுரளி சார் பரிசளித்தார்). இந்தச் சுற்றில், ‘என் சுவாசக் காற்று’ படத்திலிருந்து வைரமுத்துவின் அட்டகாசமான பாட்டைப் பாடும் அர்ஷாதைத் தேர்ந்தெடுக்க வழக்கமான எம்.ஜி.ஸ்ரீகுமார் – சரத் – உஷா உதுப்புடன் பிரதான விருந்தினராக வித்யாதரன் மாஸ்டரும் அன்று வந்திருந்தார். அப்படி ரசித்தார். Enjoy.
குறிப்பு : ஏ.ஆர். ரஹ்மானின் இசை பிடிக்காதவர்கள் ‘ஆடபில்ல வலப்பா இதி லேடி பில்ல பிலுப்பா’ பாட்டைக் கேட்கப் போகலாம்! நன்றி.