ஷைகு பஸீர் அப்பா வலியின் சதகம்

‘அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்..’ என்று எங்கள் ஜபருல்லாநானா எழுதிய கவிதையை ஞாபகப்படுத்தும் சதகம்…  ‘இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ தந்த அப்துற் றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து பதிவிடுகிறேன். நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா மீது ஷைகு பஸீர் அப்பா வலி அவர்கள் பாடிய பிள்ளைத் தமிழ் பிறகுவரும். இப்ப – அதுவும் ஜும்ஆ நேரத்துல – இதப்போட்டா  ‘ஷிர்க்’கும்பாஹா! – ஆபிதீன்

***

இறைநேசச் செல்வரான கல்வத்து நாயகத்தின் ஞானப்பிதாவான மேலப்பாளையம் ஷைகு பஸீர் அப்பா வலி அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காணப் பேரவாவுற்று  ஒரு சதகமே பாடினார்கள்.

அதில்,

பொங்காரநேய வடிவோரைக் காணும்
புதுநாளும் எந்த நாளோ?
புகழ்யார்கள்சூழ வருவோரைக் காணும்
பொறைநாளும் எந்த நாளோ?
கங்காரநேய வொளிமேலைக் காணும்
கதிநாளும் எந்த நாளோ?
கமழ்பாதவாசம் திகழ்மார்பைக் காணும்
கதிநாளும் எந்த நாளோ?
பங்காரைநேர்செய் நயினாரைக் காணும்
பரநாளும் எந்த நாளோ?
பணியோதஓதி வருவோரைக் காணும்
பலனாளும் எந்த நாளோ?
சிங்காரவேத மஹமூதைக் காணும்
திருநாளும் எந்த நாளோ?
தீன்தீன்மும்ம துர்ரசூலைக் காணும்
ஜெயநாளும் எந்த நாளோ?

என்று ஏங்கிப் புலம்பினார்கள்.

அவர்களின் புலம்பலைக் கேட்டு மனமிளகிய கருணையங் கடலாம் முகம்மதெங்கள் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் ஒருநாள் தம் அருமைத் தோழர்கள் புடைசூழ திருத்தோற்றம் வழங்கி, ‘நீர் எம்மீது புகழ்பாடும் ஷாயிர் (புலவர்) ஆவீர்!” என்று வாழ்த்தி மறைந்தனர். இதனையே பஸீர்வலி அவர்கள் தாம் பாடிய மெய்ஞ்ஞானச் சதகத்தில்,

செவியாற சூலென்று நம்பின பேர்க்கன்பு சிந்தைசெயும்
சவியாற சூலென்னை சாஹிரென்றே சொல்லத் தான்வருத்தும்
கவியாற சூலுல்லா சேரும் லிவாவுல்ஹம் துக்கொடியும்
நபியாற சூல்முஸ்த பாவே முகம்மதே நாயகமே

என்று பாடிக் களிகூர்கின்றார்கள்.

***
நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

1 பின்னூட்டம்

  1. 28/12/2012 இல் 18:44

    வலி என்றால் காதம் ஓடும் அறிவொளிகள்
    வலி என்று தீருமோ..?
    நனவை நம்பாத அறிவொளிகள்
    கனவை நம்பும் மனம் என்று வருமோ…?
    அருவானா அல்லாவைப் பார்க்கும் அறிவொளிகள்
    உருவான ரசூலை மனம் பார்க்குமோ…?


பின்னூட்டமொன்றை இடுக