என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்? – ‘இஜட்’

‘மனுசனுக்கு காய்ச்சல் வரலாம்; ஜலதோஷம் வரலாம்; இந்த நோம்பு மட்டும் வரக்கூடாது!’ என்று கிண்டல் செய்யும் கவிஞர் தாஜ் ஒருபக்கம். கடுமையாக நோன்பு பிடித்தும் கவிதைகளை விடாத ஜபருல்லா நானா இன்னொரு பக்கம். மாட்டிக்கொண்டு விழிக்கிறேன். அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!

***

ஜபருல்லாவின் புதிய ‘கவிதை’

எல்லாமும் இருந்து
உண்ணாமல் பசித்திருந்து
அல்லாவுக்காக நோன்பு நோற்ற
நல்லடியார்களே
இல்லாமல் கிடக்கும்
ஏழைகளின் பட்டினிக்கு
என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்?
 
அல்லாஹ் நோன்பாளிக்கு மட்டும்
நேரடியாகவே
கூலி கொடுப்பானாம்
ஏன் தெரியுமா?
கூலிக்காரர்கள்தான்
எப்போதும்
பசியோடு இருப்பார்கள்
அதுசரி நேரடியாக எதற்கு?
இடைத்தரகர்கள் பற்றி
அவனுக்குத் தெரியாதா என்ன?
 
- இஜட். ஜபருல்லாஹ் -

ஒரு மனிதனின் கதை – இஜட். ஜபருல்லா

‘ரமலான் பிறக்கட்டும் , மனங்கள் திறக்கட்டும், அன்பு பெருகட்டும், அகிலமே மகிழட்டும்’ என்ற குறுஞ்செய்தியோடு ஜபருல்லா நானா முந்தாநாள் அனுப்பிய கவிதை (அ) இன்னொரு செய்தி. இந்த மனிதரிடமிருந்து ‘கவிதைகளை’ வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது!.

ஒரு மனிதனின் கதை
இஜட். ஜபருல்லா

நீரால் உருவாகி
இருட்டிலிருந்து
காற்றால் உயிரேந்தி
வெளிச்சத்தில் விழுந்து
இருட்டுக்கும் ஒளிக்கும் நடுவே
உறங்கி விழித்து
இறுதியில் மரித்து
மண்ணில் புதைந்து
நடுவில்
கொஞ்சம் வாழ்க்கை!

**

நன்றி : இஜட். ஜபருல்லா

« பழைய வரவுகள்