நன்மையின்பால் விழிப்புள்ளவர்கள் அடுத்த மதத்தில் தலையிடுவதில்லை – காந்திஜி

gujarat_victim

‘கோத்ரா நிகழ்ந்ததால்தான் குஜராத் நிகழ்ந்தது’ என்று கோவாவில் அன்று கூறியவர்களுக்கு இன்று ஒரு நினைவூட்டல் (‘ஒரு இயற்கையான எதிர்வினை’) :

“மனிதர்களின் எண்ணிக்கை அளவுக்கு மதங்கள் இருக்கின்றன. ஆனால் தேசத்தின் நன்மையின்பால் விழிப்புள்ளவர்கள் அடுத்த மதத்தில் தலையிடுவதில்லை. இந்தியா ஹிந்துக்களால் மட்டுதான் ஆளப்படவேண்டும் என்று ஹிந்துக்கள் விரும்பினால், அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஹிந்துக்கள், முஹம்மதியர்கள், ஃபார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து இந்நாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களெல்லோரும் இந்நாட்டின் குடிமக்கள். அவர்களது நலன்களுக்காகவே அவர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டியிருக்கிறது. ஒரே தேசத்தவரும், ஒரே கருத்தை சொல்கிற மதங்களும் இந்த உலகில் எங்கும் இல்லை, இந்தியாவைத் தவிர” – 1969ல் நடந்த அஹமதாபாத் கலவரம் குறித்த நீதிமன்றக் கமிஷன் அறிக்கையில் ஜக்மோகன் ரெட்டியும், நுஸ்ஸர்வான் ஜி வகிலும்  மஹாத்மா காந்தி சொன்னதாகச் சொன்னது.

குஜராத் இனப்படுகொலை 2002 – மனித இனத்திற்கெதிரான குற்றம் (Crime Against Humanity) நூலிலிலிருந்து… (2002 குஜராத் இனப்படுகொலை பற்றிய விசாரணை அறிக்கை – பாக்ம் 1. வெளியீடு : இலக்கியச் சோலை , 26 பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை – 600 003)

நன்றி : M.S. அப்துல் ஹமீது / இலக்கியச் சோலை, டீஸ்டா ஸெடல்வாட், அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் – குஜராத் 2002 (Concenned Citizens Tribunal – Gujarat 2002),

**

சுட்டிகள் :

The Truth: Gujarat 2002 – Tehelka report
The Truth: Gujarat 2002: Babu Bajrangi (YouTube)