வெள்ளைமாளிகை பெருச்சாளிகள் – ஓஷோ

‘பூண்டோடு தற்கொலை செய்துகொள்ள நாம் முடிவு செய்தாலன்றி மூன்றாம் உலகப் போருக்கு சாத்தியமில்லை….. சிறு போர்கள் நடக்கவே வேண்டும். இல்லாவிட்டால் இந்த வல்லரசுகள் எங்கே தம் ஆயுதங்களை விற்க முடியும்?’ என்று கேட்கும் ஓஷோ சொன்ன ‘ஜோக்’ இது. இன்னொரு போரும் அழிவும் ஏற்படுமோ என்ற பதட்டத்தில் பதிவிடுகிறேன். ஓஷோ குறிப்பிடும் ஜனாதிபதியின் பெயரை தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் புத்தகச் சந்தையில் நூலை வாங்கலாம். ஆனால், பெயர்களில் எந்த வித்யாசமும் இல்லை. எல்லா அதிபர்களும் அப்படித்தான்.

நூலில் படு சுவாரஸ்யமான ஜோக்குகள் இருக்கின்றன. உதாரணமாக…. காட்டுவழியில் போகும் இரண்டு கன்னியர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். ‘அச்சச்சோ.. நாம் 2 தடவை கற்பழிக்கப்பட்டோம் என்பதை தாயாரிடம் எப்படி விளக்கப்போகிறோம்?’ என்கிறாள் ஒருத்தி. ‘ ‘நாம் ஒருதடவைதானே கற்பழிக்கப்பட்டோம்’ என்று குழம்பிய மற்றவள் கேட்கும்போது ‘ சரிதான், ஆனால் மறுபடியும் அதே வழியில்தானே திரும்பி வருவோம்?’ என்ற பதில் கிடைக்கிறது. அதையெல்லாம் இங்கே பதிவிட இயலுமா? பக்கங்களின் பவித்திரம் என்னாவது! எனவே சீரியஸான ஜோக் – உங்கள் சிந்தனைக்கு…

***

‘பிரபுமாயா, ஒரு புன்னகையை பொருத்திக் கொள்ள நீ முயன்றால் நீ களைப்பாக உணர்வாய். ஏனென்றால் ஒரு புன்னகையை அணிந்து கொண்டிருப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் தேவை. அதை நீ xxxxxxxxx போல அப்பியசிக்க வேண்டும். ஆனால் அப்போது அது புன்னகையே அல்ல. உங்கள் வாய் வெறுமனே திறந்திருக்கிறது. உங்கள் பற்கள் வெறுமனே தெரிகின்றன. அவ்வளவுதான்

ஒவ்வொரு இரவிலும் அவர் மனைவி அவர் வாயை மூட வேண்டியிருக்கிறது என கேள்விப்பட்டேன். ஏனென்றால் ஒருதடவை ஒரு பெருச்சாளி அவர் வாய்க்குள் போய்விட்டது. அவள் டாக்டருக்கு தொலைபேசினாள். டாக்டர் சொன்னார், ” நான் வருகிறேன். ஆனால் அதற்கு நேரம் ஆகும். அதற்கிடையில் அவர் வாயருகே ஒரு பாலாடைக்கட்டியை காட்டிக் கொண்டிருங்கள்.”

டாக்டர் வந்துபார்த்தபோது அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவள் இன்னொரு பெருச்சாளியைக் காட்டிக்கொண்டிருந்தாள். அவர் சொன்னார் “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவர் வாயருகே பாலாடைக்கட்டியை காட்ட அல்லவா சொன்னேன்?!”

அவள் சொன்னாள். “அப்படித்தான் சொன்னீர்கள். ஆனால் பெருச்சாளியைத் துரத்திக்கொண்டு ஒரு பூனை உள்ளே போய்விட்டது. எனவே முதலில் பூனையை வெளியே கொண்டுவர வேண்டி இருக்கிறது”

அதிலிருந்து ஒவ்வொரு இரவும் அவருடைய வாயை அவர் மனைவி வலுக்கட்டாயமாக மூட வேண்டி இருக்கிறது. அது ஆபத்தானது! வெள்ளைமாளிகை என்பது ஒரு பழைய கட்டிடம். அதில் பல பெருச்சாளிகள் உள்ளன. உண்மையில் வெள்ளை மாளிகையில் பெருச்சாளிகளைத் தவிர வேறு யார் வசிக்கிறார்கள்? வெள்ளை மாளிகையில் வசிப்பதில் யாருக்கு அக்கறை? ஆக பெருச்சாளிகள் அங்கே வசிப்பதால் பூனைகளும் அங்கே வசிக்கின்றன.’

- ஓஷோ -
கவிதா வெளியீடான ‘ஸென்’னுடன் நடந்து.. ‘ஸென்’னுடன் அமர்ந்து நூலிலிருந்து.. (மொழியாக்கம் : சிங்கராயர்)

***

நன்றி : கவிதா பப்ளிகேஷன்

***

மேலும்…

ஓஷோ பேசுகிறார், உரக்கக் கை தட்டுங்கள்! – தாஜ்