சகோதரர் மு.மாலிக்-ன் பதிவிலிருந்து…
பிறரது நம்பிக்கைகளை கண்ணியத்துடன் அணுகுதல்… எப்போதும் நம்பிக்கை பிறரது அங்கீகாரத்தைக் கோருகிறது. ஏனெனில் எல்லா நம்பிக்கையின் பின்னும் சந்தேகமே இருக்கிறது. அது எவ்வளவு ஆழமான நம்பிக்கையான இருந்தாலும் சரி. எனவே நம்பிக்கை மறுப்பாளர்களைப்பற்றிய பயத்தையும், அங்கீகாரம் பற்றிய ஏக்கத்தையும் எப்போதும் சுமந்தே திரிகிறது. நம்பிக்கை அதை நம்புகிறவர்களின் செயலால் பலமடைகிறது; சிறப்படைகிறது; சில சமயம் நலிவடைகிறது; கேலிக்கும் கண்டனத்துக்கும் ஆளாகிறது. ஆனால் உண்மையான அனுபவம் நம்பிக்கை போன்றதல்ல. அதற்கு இன்னொருவர் தேவையற்றவர். ஒருவரது அனுபவத்தை இன்னொருவருக்குத் தரமுடியாது என்ற புரிதலே அது இன்னொருவரது அங்கீகாரத்தைக்கோராது தன்னளவில் முழுமையாக இருக்கச்செய்கிறது. இந்த இடத்தில் அல்ஹிலாஜ் மன்சூரை உங்களுக்கு நினைவுக்குக் கொண்டுவருகிறேன். அது தான் அனுபவம் தருகிற அத்தாரிட்டி. அது சமய நூலகளையோ, சமூகத்தையோ, இன்னொருவரையோ அங்கீகாரத்துக்காக ஏறிட்டு நோக்காது. ‘சாத்தானை வெறுத்து ஒதுக்குங்கள்’ என்ற குரானின் வரிகளை (தனது பிரதியில்) அடித்த ஒரு பெண் சூபியைப் பற்றி நான் படித்திருக்கிறேன். அந்த சூபி சொன்னார், ‘ என்னால் அன்பு செய்யவே முடிகிறது; அது சைத்தானாக இருந்தாலும் என்னில் இருந்து அன்பைத்தவிர வேறொன்றை செய்யமுடியாது; இது என் அனுபவத்துக்கு மாறானது’ இதுதான் அனுபவம். தங்களது நம்பிக்கை காப்பாற்றப்படவேண்டும், கண்ணியப்படுத்தப்படவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்; ஆனால் உண்மை காப்பாற்றுவதற்குரிய ஒன்றல்ல; அது எப்போது இருப்பது; யாருடைய தயவும், எதிர்ப்பும் அதைப்பொருத்த வரையில் சம்பந்தமில்லாதது. அதை அறிந்துகொள்கிறவன் மற்றவர்களின் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
***
நன்றி : தங்கமணி . மு. மாலிக்
பேராசைகள் - அகமும் புறமும் « Snap Judgment சொன்னது,
நவம்பர் 21, 2007 இல் 5:05 மு.பகல்
[...] மேம்பாட்டுக்கோ அல்லது பிறிதொரு நம்பிக்கை தரும் விஷயத்திற்கோ பயன்படுத்தாமல் [...]
kalyanakamala சொன்னது,
நவம்பர் 22, 2007 இல் 4:13 மு.பகல்
மிக அற்புதமான கருத்து!அனுபவப்பட்டு எழுதிய சத்தியமான வார்த்தைகள்.
வாழ்த்துக்கள்
கமலா